Monday, July 9, 2012

மலர்ந்திடும் வேளை

      

மலர்ந்திடும் இதயம் மனமல ரவிழும்
மறுபடி உதயம் வரும்
கலந்திடும் இருளும் ஒளிபெறக் கமலம்
கதிர்வரப் புன்சிரிக்கும்
நலந்தரு எண்ணம் நடைகொளவிடியும்
நாளொன்று புதிது எழும்
இலதெனும் வெறுமை இருளொடுவிலகும்
இரவியின்சுடர் பரவும்

மரங்களில் பறவை மறுபடி ஒலிக்கும்
மறைந்திடக் கிடந்திடினும்
சுரங்கள் என்றோசை சிறு பெரு கூச்சல்
சேர்ந்திடக் கலகலக்கும்
பரண்களில் காவல் பாடிடஓடும்
பயிரிடை மனம்கொள்ளினும்
அரண்டுவிண்ணோடி முகிலிடைதேடி
அதுமறு படியும் வரும்

அகமெழுமன்பு அமைதியில் காணும்
ஆதவனென ஒளிரும்
முகமதில் ஏனோ முறுவலை நீக்கும்
மொழிபல வெம்மைதரும்
தகுமென இல்லா தவறுகள்கூடி
தலவிதிதனை எழுதும்
தகமைகள் இல்லா தனை தனிகூறின்
தரணியும் அமைதிகொளும்

******************************

No comments:

Post a Comment