Saturday, July 7, 2012

காப்பாள் சக்தி

பக்திக்கரம் பொத்திப் பரிவொடு
பக்கமிவன் சத்தம் இடஉனை
மிக்கபெரி தென்னக் குரலொடு
வரம் கேட்டேன்

சித்தம் இழ அஞ்சித் திகிலுற
சத்தம் இடு கத்திக் கதறென
நித்தங் கொடும் பக்தன் இவனுயிர்
துடியென்றாய்

வற்றும்குளம் வெப்பக் கனலிடை
நிற்கும் புனல் அற்றுக் கமலமும்
சுற்றிச் சுடுங் கற்றைச் கதிர் பட
வாடல்போல்

வெட்டை வெளி கொட்டும் மழைபுயல்
பட்டுத் தெறி மின்னல் இடையிவன்
மொட்டைத் தலை விட்டுக் காலணி
நில்லென்றாய்

பெட்டைக் குயில் வட்டச் சுனையிடை
குட்டை மரம் கொட்டும் மலர்விழ
பட்டுத் துணி பக்கம் துணையுடன்
பழம் உண்டு

சுட்டும் மொளிர் வட்டப் பொன்மதி
எட்டும் இசை தொட்டுத் தென்றலில்
கிட்டும் சுகம் மட்டும் கொடுஎன
வரம்கேட்டேன்

பட்டுத் துடி அட்டத் திசையிலும்
வெட்டிக் கிழி துட்டன் குலமதை
சட்டம் இலை குற்றம் இவரென
விதிகூறி

தட்டிக் கிழி ஒட்டத் தொலையிவர்
மட்டும் இலை சுற்றும் முழுதெனக்
கொட்டிட்டிரு கைகள் சத்தமும்
செய்தாரை

வைத்துப் பெருவஞ்சம் செய்தவர்
புத்திக்குள் என்‌ வைத்துப் பிழைபட
வெட்டிக் களி தட்டி சிதறடி
என்றாயோ

முற்றும் ஒளிர் கற்றைச் சுடுமனல்
மற்றும் வெடி கொள்ளப் பெருவெளி
சற்றும் பிறழ் வில்லை யென உருள்
பிரபஞ்சம்

கட்டிப் பெரு யந்ரக் கதியுடன்
தொட்டுகட கட்டக் கடவென
பட்டுத் துகளென்னச் சிதறிடா
தோர் சக்தி

தெட்டத் தெளி வுற்றுத் தேவியை
மட்டும் நினை ந்துன்னை தொழுதிட
கட்டி சுழல் கொள்ளும் சக்தியே
காவாயோ

No comments:

Post a Comment