Wednesday, July 11, 2012

உண்மைகளாம்

              உண்மைகளாம்

பூக்கலாம் பூவெலாம் புன்னகைக்கலாம்
பூமணம் தென்றலும் பெற்று வீசலாம்
ஆக்கலாம் அழியலாம் அகிலமீதீனில்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி ஆளலாம்
நோக்கெலாம் மாறினும் நினைவு லாமதி
நெஞ்செனும் வான்வரா நிற்க லாகுமோ
வாக்கெலாம் தேன்சுவை வந்ததாமெனில்
வாழ்க்கையில் வேறெதும்  வண்ணமும் ஏனோ

ஏற்கலாம் தள்ளலாம் எதுவுஞ்செய்யலாம்
இன்பமென் றானதை இழக்க லாகுமோ
ஏற்றலாம் இறங்கலாம் இடிந்துவீழலாம்
இன்மனம் தண்டனை இழைக்கலாகுமோ
தோற்கலாம் வெல்லலாம் தோள்கள் மோதியே
தூயஇன் வேளையில் தூய்மை போகுமோ
போற்றலாம் பாடலில் புதுமை கண்டெவர்
புன்னகை கொண்டுமே புரிந்துகொள்ளலாம்

சாய்க்கலாம் வீழ்த்தலாம் சூறைக் காற்றதும்
சாலையின் ஓரத்துச் சோலை மரமெலாம் !
வாய்க்காலும் வரம்பிலே வாழும் நாணலும்
வந்ததோர் புயலிலே வளைய வீழுமோ
நோய்க்கெலாம் மருந்தென நினைவி லூற்றலாம்
நேர்மையைக் கூறுமக் கூற்று தன்னையே
வாய்மையும் கொண்டிட வாழ்த்திக் கூறலாம்
வந்தெங்கும்  வீசட்டும் வசந்த மாகவே!

No comments:

Post a Comment