கொடுத்தவனே தாவென்று பறிக்கும்போது
கொண்டதெது காயாமோ கனியோ பிஞ்சோ
விடுத்தவனே வேண்டும்போ துடைத்து வீழ்த்த
வேடிக்கை நாமும் என்செய்வோம் கண்டு
தடுத்தவனை நிறுத்தவும் முடியவில்லை
தானாக உயிரையும் பிடித்துக்காக்கும்
கொடுத்ததோர் திறனையும் கொண்டோமல்லோம்
கொண்டவன் கொண்டிடக் குறுகிநிற்போம்
இருட்டோ செல்லும்வழி இல்லை வண்ண
ஒளி நிறைந்த பாதையோ மலர்கள் தூவி
இருத்தி யொரு ரதமோட்டி அழைத்தார்தானோ
இல்லையொரு பல்லக்கில் ஏற்றினாரோ
கருத்தவழி விண்மீன்கள் தொங்கும் பாதை
கனத்தவெடி வானதிர சத்தமிட்டு
பருத்த அனல் சிதறுமோர் பாதைதானோ
பனிகுளிர கூதலும் படர்ந்ததுண்டோ
நிறுத்தியொரு மூச்சிழுத்து விட்டோம் இங்கே
நிருத்தியமோ இல்லை வெறும் நிழலே வாழ்வு
வெறுத்து வரும் காற்றானதுள்ளே செல்லா
விட்டதெனில் அடுத்தகணம் வருவோம் பின்னே
பொறுத்த உடல் பகலிரவாய் இயங்கம்தன்னும்
போய்விடவே துருத்தியினை மூடிவைக்கும்
தறித்தமரம் வீழுவதாய் அந்தக் கணமே
தரணிஉடல் தழுவ உயிர் தனித்ததாகும்
ஒருத்தர் தனும் நிரந்தரமென்றில்லை யம்மா
ஓடிவிளையாடிடும் உதைபந்தாட்டம்
பருத்த களைப்பாகிவிட பாதியாட்டம்
படைத்தவரே குழல் ஊத ஆள்மாறாட்டம்
இருந்தவரோ போகஇன் னொருத்தர்வரவு
இதுவேதான் உலகென்னும் இயற்கை பதிவு
வருத்தமுறும் மனத்தோடு இறைவன் அருளால்
வணங்குகிறேன் அஞ்சலிகள்! அமைதிகாண்க!
கொண்டதெது காயாமோ கனியோ பிஞ்சோ
விடுத்தவனே வேண்டும்போ துடைத்து வீழ்த்த
வேடிக்கை நாமும் என்செய்வோம் கண்டு
தடுத்தவனை நிறுத்தவும் முடியவில்லை
தானாக உயிரையும் பிடித்துக்காக்கும்
கொடுத்ததோர் திறனையும் கொண்டோமல்லோம்
கொண்டவன் கொண்டிடக் குறுகிநிற்போம்
இருட்டோ செல்லும்வழி இல்லை வண்ண
ஒளி நிறைந்த பாதையோ மலர்கள் தூவி
இருத்தி யொரு ரதமோட்டி அழைத்தார்தானோ
இல்லையொரு பல்லக்கில் ஏற்றினாரோ
கருத்தவழி விண்மீன்கள் தொங்கும் பாதை
கனத்தவெடி வானதிர சத்தமிட்டு
பருத்த அனல் சிதறுமோர் பாதைதானோ
பனிகுளிர கூதலும் படர்ந்ததுண்டோ
நிறுத்தியொரு மூச்சிழுத்து விட்டோம் இங்கே
நிருத்தியமோ இல்லை வெறும் நிழலே வாழ்வு
வெறுத்து வரும் காற்றானதுள்ளே செல்லா
விட்டதெனில் அடுத்தகணம் வருவோம் பின்னே
பொறுத்த உடல் பகலிரவாய் இயங்கம்தன்னும்
போய்விடவே துருத்தியினை மூடிவைக்கும்
தறித்தமரம் வீழுவதாய் அந்தக் கணமே
தரணிஉடல் தழுவ உயிர் தனித்ததாகும்
ஒருத்தர் தனும் நிரந்தரமென்றில்லை யம்மா
ஓடிவிளையாடிடும் உதைபந்தாட்டம்
பருத்த களைப்பாகிவிட பாதியாட்டம்
படைத்தவரே குழல் ஊத ஆள்மாறாட்டம்
இருந்தவரோ போகஇன் னொருத்தர்வரவு
இதுவேதான் உலகென்னும் இயற்கை பதிவு
வருத்தமுறும் மனத்தோடு இறைவன் அருளால்
வணங்குகிறேன் அஞ்சலிகள்! அமைதிகாண்க!
No comments:
Post a Comment