Wednesday, July 11, 2012

நிலவும் பூவும் சுடரும்


தீதந்த வெம்மையில் சுட்டபொன்னோ -அந்த
.  நீலத்து வான்மதியும் - கதிர்
   தான்தந்த தாலொளி பெற்றதன்றோ அந்த
.  நேரற்ற கூன்நிலவும்
நாதந்தான் கீதமுட னொலிக்க இந்த
   நாட்டில் நிலவெறிக்க - என்றும்
   நாடியொளி கொடுத் தாய்நில வின்முகம்
   நாளும் வளர்ந்து கொள்ள

வா தந்தான் என்றிட வந்ததெல்லாம் நிலா
   வண்ணம் மறந்திடுமோ அது
   வீதி புவிசுற்றிப் போய்வரினும் சுடர்
   வெய்யோனைச் சுற்றுதன்றோ
பூதந்த வாசமும் போய்விடுமோ- எழில்
.  புன்னகை வாசலிலே - தினம்
   போய்வந்த தும்மணம் வீசுதென்றல் -என்றும்
   பூவை மறந்திடுமோ

பேதந்தான் வானிற்பெரும் முகில்கள் வந்து
    போய்வரும் நேரத்திலே.  அந்தோ
    போகின்ற மேகம்மறைத் தென்ன அதில்
    பொன்நிலா பின்எழவே
மாதந்தான் மார்கழி கார்த்திகையோ மயில்
.    மீதுமழை பொழிதோ - ஒரு
    மன்னவன் தேரிடை பூங்கொடியோ - மனம்
    மாறக் கிடந்திடுமோ

தீவந்த திக்கிலே தென்றல்வந்து சிறு
    தேன்மலர் சுட்டதுவோ- கொடுந்
.   தேளுடன் பாம்புகள் தொங்கும் வழி -செல்ல
.   தேசம் கடத்தினரோ
பாவந்தான் விட்டேகும் பாதையிலே
  .  பனி மூடிகிடந்ததென்ன - நடை
.    போகையில் பாதங்கள் நீர்சறுக்கி - நெடும்
.    பள்ளத்தில் வீழ்ந்ததென்ன

தாவத்தான் பற்றினும் ஒர்கிளையை - கரம்.
   தொட்டும் தவறுவதேன் - நல்ல
..  தங்கம் என்றே யதுமின்ன அள்ள - அது
.   தத்தும் தவளைகள் ஏன்
நாவைத்தான் வெட்டி நறுக்கிடலாம் மழை
    நாளில் கத்தும் தவளை-  இல்லை
    நாள்முழுதும் அது கத்தும்  விட்டுவிடு
    நாவே  அதற்கு எல்லை

....................

No comments:

Post a Comment