தீதந்த வெம்மையில் சுட்டபொன்னோ -அந்த
. நீலத்து வான்மதியும் - கதிர்
தான்தந்த தாலொளி பெற்றதன்றோ அந்த
. நேரற்ற கூன்நிலவும்
நாதந்தான் கீதமுட னொலிக்க இந்த
நாட்டில் நிலவெறிக்க - என்றும்
நாடியொளி கொடுத் தாய்நில வின்முகம்
நாளும் வளர்ந்து கொள்ள
வா தந்தான் என்றிட வந்ததெல்லாம் நிலா
வண்ணம் மறந்திடுமோ அது
வீதி புவிசுற்றிப் போய்வரினும் சுடர்
வெய்யோனைச் சுற்றுதன்றோ
பூதந்த வாசமும் போய்விடுமோ- எழில்
. புன்னகை வாசலிலே - தினம்
போய்வந்த தும்மணம் வீசுதென்றல் -என்றும்
பூவை மறந்திடுமோ
பேதந்தான் வானிற்பெரும் முகில்கள் வந்து
போய்வரும் நேரத்திலே. அந்தோ
போகின்ற மேகம்மறைத் தென்ன அதில்
பொன்நிலா பின்எழவே
மாதந்தான் மார்கழி கார்த்திகையோ மயில்
. மீதுமழை பொழிதோ - ஒரு
மன்னவன் தேரிடை பூங்கொடியோ - மனம்
மாறக் கிடந்திடுமோ
தீவந்த திக்கிலே தென்றல்வந்து சிறு
தேன்மலர் சுட்டதுவோ- கொடுந்
. தேளுடன் பாம்புகள் தொங்கும் வழி -செல்ல
. தேசம் கடத்தினரோ
பாவந்தான் விட்டேகும் பாதையிலே
. பனி மூடிகிடந்ததென்ன - நடை
. போகையில் பாதங்கள் நீர்சறுக்கி - நெடும்
. பள்ளத்தில் வீழ்ந்ததென்ன
தாவத்தான் பற்றினும் ஒர்கிளையை - கரம்.
தொட்டும் தவறுவதேன் - நல்ல
.. தங்கம் என்றே யதுமின்ன அள்ள - அது
. தத்தும் தவளைகள் ஏன்
நாவைத்தான் வெட்டி நறுக்கிடலாம் மழை
நாளில் கத்தும் தவளை- இல்லை
நாள்முழுதும் அது கத்தும் விட்டுவிடு
நாவே அதற்கு எல்லை
....................
No comments:
Post a Comment