Sunday, July 8, 2012

பறந்து பார்

பற பற  கவிதையின் சிறகுகள் விரி விரி
பரந்திடும் பெருவெளியில்
துறதுற  கயிறுகள் இறுகிடும்வலி இது
பெரிதெனத் தெரியுதெனில்
நறநற வெனப் பல நெரிந்திடும் ஒலிகள்பல்
லிடை யிருந்தெழு மொலியில்
குறைகுறைப் பிரசவம்  நிகழுவ துயிரிடை
கொளும் வலி சிறிதல்லவே

விரைவிரை எழுந்துடு விரிவிழி தெரிந்திடும்
வியன்தரு வெளிவானில்
நுரைநுரை எனப்பல நகர்ந்திடும் முகிலிடை
நிறைந்திடு சுதந்திரமும்
வரைவரை எதுவுமே இலதொரு பெருவெளி
விடிவுடன் கிழக்கிடையே
கரைகரை யிலப்பெரு கனவுகள் தருகதிர்
கவிதையென் றெழுகையிலே

விரி விரிமலர்களை வடிவினில்பல நிற
வழிமது இதழ் நெகிழ்வே
புரிபுரி உணர்வெனும் பெரிதொரு அரங்கமும்
புதிதென நடமிடவே
சரிசரி எனதுன திளமன மதுசொலும்
சகலதும் கவிதைகளே
எரிஎரி இறுகிடும் இழைகளும்  கரங்களில்
இருந்தெரிந் திடநீறே

தெரி தெரி, வரிவரி எனவரிந்திடவலி
துன துயிர்படுந் துயரே
சிரி சிரி பெரிதென உரிகரி இரவெனும்
சிறுமையும் விலகிடவே
அரிதரி தெனஅறி அவள்தரும் தமிழ்பெரி
ததைநினை உயர்வெனவே
வெறிவெறி எனவெழு உணர்வுகள் தனைவடி
உயர்தரு கலைஎனவே!

*****************

No comments:

Post a Comment