Monday, July 9, 2012

சாந்தி! சாந்தி!

        

செந்தமிழ்க விந்தமொழி சீருட னெழுந்ததமிழ்
சொன்னமுறை மைகள் தவறி
வந்துகறை கொண்டவித மென்றவகை யாமிதெனில்
வந்துகளை சக்திதேவி
தந்தமொழி யோநினது  சந்தமது கொண்டதன்றி
எந்தன் வகையொன்று மிலைகாண்
மந்தமிள மாருதமென் றெண்ணி எழும் தென்றலிடை
இந்த விதமென்ற பகையென்

நந்தவன மாமலர்சு கந்தமது வானமு
மெழுந்ததென எண்ணிமலர
வந்த விளை தென்றலும்ப டர்ந்த பொழு தெங்கணும்
விளைந்த விதம்வேறு மருவி
இந்தவொரு மாசபை கொளும் விதிகள் தானுமுறை
கொன்றதெனும் சேதிபரவ
சந்தனமும் பூசி ஒருமந்தைபிரித் தாடுமுடி
வென்ற பலிபீடம் அணுக

வந்துகணம் சூலமுமென் நெஞ்சிலிடு நீதி
யழிந்தஇடம் மேவிநிரவி
செந்நிறமென் நீர்கழுவி குந்தக மழிந்துகறை
கொண்டஇடம் தூய்மைபரவி
தந்துவிடு நீமொழியென் றந்தகனை காரிருளில்
சந்த மொளிர்பாதைகாட்டி
வந்துஇரு என் றெனது வாழ்வில்  கலையீந்தவளே
வண்ணஒளி மாற்றிவிடுநீ

சுந்தரமும் சோதிபிர பஞ்சமதில் தீஎனவும்
சுற்றிவரும் சக்திதேவி
மந்திர வினோதமொழி மாயவலை கொண்டெனையே
மாற்றியவள் நீயேசொலடி
மந்தமுடை கொண்டமன தெண்ணமதில் தூசிதனை
இன்றுதுடை இன்னும் கருதி
வந்துசுகம் தந்தவளே வாழவிடு என்னை நின
தென்ற நினைவோடுஅணுகி !

சொந்தநிலை யேதுமிகை யென்றவகை தீர்வுதனை
தந்திடடி சாந்தி சாந்தி
சந்(தி)ரனென நான்தினம்வ ளர்ந்த பிறையாகி
வளம் குன்றுவதும் மீண்டும் நிறுத்தி
அந்தவொரு நாளில்சு தந்திரமென் றானகவி
கொண்டபொருள் நீங்கவிளைத்தாய்
இந்ததின மேதுஇனி ஒன்றுதவி றென்னில் எது
வென்று மன  தோடு பகர்வாய்!

No comments:

Post a Comment