Wednesday, July 11, 2012

காற்றாடி


நிற்குமிந்த நிலையின்று திரும்பிப் பார்க்கிறேன்
நெடிதுயர்ந்த கட்டிடங்கள் நிமிர்ந்து காண்கிறேன்
சற்றுஎட்ட உயர வானில் செல்லும்மேகங்கள்
சுற்றி வட்டமிடுப்போகும் சிறியபறவைகள்:

பொற்கதிர்கள் பொலியவெம்மை போடும்வானிலே
நற்குணத்தி னோடு  காணும் நாளின் ஆதவன்
கற்றறிந்த மாந்தராக காணும் போதிலே
சுற்றுதந்த சிறிய வண்ண பட்டம் காண்கிறேன்

உயர்ந்தவானில் எந்த வேளை எழுந்ததிங்கிதே
தயங்லோடு தலைநிமிர்ந்த தருணம் போனதோ
மயங்கிஆடும் பொழுதிலென்ன கருவம் மீறுதோ
இயங்குகின்ற துள்ளல் ம்ம்ம் இதுவும்வேண்டுமோ

பெரியவானில் எழுந்ததென்ற பெருமைபேசுதோ
உரியதான நிலையைவிட்டு உருண்டுவீழ்குதோ
புரியவில்லை இதுவும்காற்றின் விதியென்றானதோ
சரிவதென்ன அடாடா அந்தோ சாய்ந்துபோனதோ

No comments:

Post a Comment