மலர்மீ திருந்து மணம்வேறு சென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து உணர்வென்னும் தாகம்
பிரியாத வரமொன்று வேண்டும்
அலைமீ திருந்து குளிரான தென்றல்
அசைந்தோடி பிரிகின்ற போதும்
கலைமீது கொண்ட எனதாசை என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
தொலை வானிலுள்ள நிலவான தொருநாள்
வரவானில் மறந்திட்ட போதும்
விதையான மைந்தர் மனஉறுதி யென்னை
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
தலைமீது மின்னல் இடியாகி துன்பம்
ஒருதாகி விழுகின்ற போதும்
உருவாகுமீழம் எனும்ஆசை நெஞ்சில்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
மலையான தொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும் போதும்
உருவாகும் ஈழ எனசேரும் மக்கள்
பிரியாதவரம் ஒன்று வேண்டும்
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து உணர்வென்னும் தாகம்
பிரியாத வரமொன்று வேண்டும்
அலைமீ திருந்து குளிரான தென்றல்
அசைந்தோடி பிரிகின்ற போதும்
கலைமீது கொண்ட எனதாசை என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
தொலை வானிலுள்ள நிலவான தொருநாள்
வரவானில் மறந்திட்ட போதும்
விதையான மைந்தர் மனஉறுதி யென்னை
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
தலைமீது மின்னல் இடியாகி துன்பம்
ஒருதாகி விழுகின்ற போது
உருவாகுமீழம் எனும்ஆசை நெஞ்சில்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்
மலையான தொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும் போதும்
உருவாகும் ஈழ எனசேரும் மக்கள்
பிரியாதவரம் ஒன்று வேண்டும்