(இதில் சில இடங்களில் இரு பொருள் தோன்றும் கீழே பார்க்க:-)
பொன்னன்ன நடையில் புகழுடைத்த தாயென்
பெற்றநிலை பெருங்காயம் செய்தால்
என்ன துயரென்ப இல்லை இலைஎன்றால்
இல்லைஇலை என்றதரு பொருளோ?
மின்னல் நகைகொள்ள மிளிருமென எண்ண
மிரளவென மின்னலிடி கூட்டும்
பன்நல்ல செய்கை பன்னல்லதென்று
பன்னல்லல் புன்மை களை காணும்
கண்ணென்று கூறிக் கனிவ தனம் என்றால்
காய்களிடு கண்களெனக் காணும்
வண்ண இசைபாடி வண்டூதும் போதோ
வட்டமலர் தென்னைமது ஊற்றும்
உண்ண வெனக்கூற ஊற்றுமமு தான
உள்ளிருந்து நீலமென மேவும்,
எண்ண மதியாலே எண்ணிரண்டு கூட்ட
எழுபதிலோ எண்ணத் தீ பொசுங்கும்
பண்ணென்று கூறப் பதில்வருவதெல்லாம்
படுவினைகள் பண்ணலென வாகும்
கண்ணாடி முன்னே கலையுருவம் கொள்ள
கலையுருவம் கலை யென்று கதறும்
தண்மை யலைப்பொய்கை தன்னில் நீராட
தளதளக் ’கும்மாள(ழ)’ மிட்டுக் கொள்ளும்
வண்ணத்து வில்லாய் வானத்து மேலே
வாழ்வைத் திருத்திப் பின் தள்ளும்
பேச்செல்லாம் பேச்சாய் பிறைசூடி(க்) காணும்
பிறிதொரு கண் பார்வையென மாறும்
வாய்ச் சொல்லின்ராகம் வடியுமது என்ப
வருகு ருதிவண்ண மது வடியும்
தீச்சுடர்களேற்றி தீயஇருள்போக்க
தெரியும்நிழல் கிலிபிடித்து ஆட்டும்
பூச்சூடும் பெண்ணே பாவியிவன் நெஞ்சின்
படபடக்கும் துடிப்பி லுயிர்துடிக்கும்!
************************
இருபொருள் மயக்கம்
உதாரணமாக முதல்வரிகளில்
1. நல்ல குணமும் புகழுமுடைய அன்னை பெற்றமேனியில் என்பது ஒன்று
2. புகழை உடைத்ததாய் என் நடைமுறை(க் கேடு) எனது மேனியில் பெரும் புண்ணாய் துயர்கொள்ள வைக்க ....
என்பதுவும்
1. இந்த உடலுக்கு துயரம் இல்லை இல்லை என்று அடித்துக்கூற
துயரம் உள்ளதென்ற பொருள் தருதே? (இல்லை இல்லை என்ற
இரண்டு இல்லை, ’உண்டு` என்று வரும்
2. என்ன துயர் இல்லாமலில்லை என்று கவலைப்பட்டால்
அது மரத்தில் இலை இல்லை என்பதுபோல் வேறான வகையில்
தொனிக்கிறதே
என்பதாகச் சில இரு பொருள்படும்
பொன்னன்ன நடையில் புகழுடைத்த தாயென்
பெற்றநிலை பெருங்காயம் செய்தால்
என்ன துயரென்ப இல்லை இலைஎன்றால்
இல்லைஇலை என்றதரு பொருளோ?
மின்னல் நகைகொள்ள மிளிருமென எண்ண
மிரளவென மின்னலிடி கூட்டும்
பன்நல்ல செய்கை பன்னல்லதென்று
பன்னல்லல் புன்மை களை காணும்
கண்ணென்று கூறிக் கனிவ தனம் என்றால்
காய்களிடு கண்களெனக் காணும்
வண்ண இசைபாடி வண்டூதும் போதோ
வட்டமலர் தென்னைமது ஊற்றும்
உண்ண வெனக்கூற ஊற்றுமமு தான
உள்ளிருந்து நீலமென மேவும்,
எண்ண மதியாலே எண்ணிரண்டு கூட்ட
எழுபதிலோ எண்ணத் தீ பொசுங்கும்
பண்ணென்று கூறப் பதில்வருவதெல்லாம்
படுவினைகள் பண்ணலென வாகும்
கண்ணாடி முன்னே கலையுருவம் கொள்ள
கலையுருவம் கலை யென்று கதறும்
தண்மை யலைப்பொய்கை தன்னில் நீராட
தளதளக் ’கும்மாள(ழ)’ மிட்டுக் கொள்ளும்
வண்ணத்து வில்லாய் வானத்து மேலே
வாழ்வைத் திருத்திப் பின் தள்ளும்
பேச்செல்லாம் பேச்சாய் பிறைசூடி(க்) காணும்
பிறிதொரு கண் பார்வையென மாறும்
வாய்ச் சொல்லின்ராகம் வடியுமது என்ப
வருகு ருதிவண்ண மது வடியும்
தீச்சுடர்களேற்றி தீயஇருள்போக்க
தெரியும்நிழல் கிலிபிடித்து ஆட்டும்
பூச்சூடும் பெண்ணே பாவியிவன் நெஞ்சின்
படபடக்கும் துடிப்பி லுயிர்துடிக்கும்!
************************
இருபொருள் மயக்கம்
உதாரணமாக முதல்வரிகளில்
1. நல்ல குணமும் புகழுமுடைய அன்னை பெற்றமேனியில் என்பது ஒன்று
2. புகழை உடைத்ததாய் என் நடைமுறை(க் கேடு) எனது மேனியில் பெரும் புண்ணாய் துயர்கொள்ள வைக்க ....
என்பதுவும்
1. இந்த உடலுக்கு துயரம் இல்லை இல்லை என்று அடித்துக்கூற
துயரம் உள்ளதென்ற பொருள் தருதே? (இல்லை இல்லை என்ற
இரண்டு இல்லை, ’உண்டு` என்று வரும்
2. என்ன துயர் இல்லாமலில்லை என்று கவலைப்பட்டால்
அது மரத்தில் இலை இல்லை என்பதுபோல் வேறான வகையில்
தொனிக்கிறதே
என்பதாகச் சில இரு பொருள்படும்
No comments:
Post a Comment