Thursday, August 16, 2012

சுவாசிப்போமா சுதந்திரமூச்சை?

பொன்னேர்மொழி கல்லும் மா புழுதிதோன்றிக்
கொள்ளாத் தொல்காலத்தே தோற்றிச்சீர்கொள்
தென்னார் வளர் தமிழம் சொன்னார்யாரோ -தமிழ்
சொல்லச்சிரம் மேனியதுபிறிதென்றாக்கும்

வல்லார்கொடுவாளை வளைத்தே நீதி
வளையாது குலம்காக்கத் தலையெடுத்து
பூல்லாய்பூண்டாய்நின்றோர் புறத்தேவளர்ந்து
பொழுதோறும்கிளைவிட்டுப் பரந்தேஉயரப்

பல்நேர்விருட்சமெனப் பரந்தேவலிமை
புகழ்பாடு நானூற்றுப் புறத்தேதானும்
சொல்லாக் கடுந்தோளின் பொலிவைக்கொண்டே
புயல்வீசும் களமாக்கிப்பொழுதில்மீளும்

தன்நேர்நிகரற்ற தமிழன்நடுவே
தழைத்த சில புல்லுருவித் தடைகளாலே
இன்னாரென் றினம்காட்ட இகமேசூழ்ந்து
எரிநஞ்சுவெடிகொண்டு இனமேகொன்றும்

மண்ணாளப்பிறந்தவரை மரணம்ஆளப்
பண்ணியபின் பலநூறாய் வகுத்தேவேலி
முள்போட்டு அடைத்த மாகொடுமைதன்னை
முழுதாகக் கேளாமல் உலகம்யாவும்

சொல்லால் விளையாடிச் செய்வதேது
செயலால்வெறும் ஆமைகதி கொள்வாராயின்
சொல்லரிய இனமழிந்து போதல்அன்றி
சுவாசிப்போமா நாமும் சுதந்திரத்தை?

No comments:

Post a Comment