Friday, August 3, 2012

கலையுள்ளம்


அலைகள் ஆடும்கடலினிலே அது 
எழுதல் அழகன்றோ
அலைகள் இல்லா ஆழிஎனில் அதில்

அழகுக் கிடமுண்டோ
உலையும் சலசல் ஓசையிடும் அது 

உண்மைஎழிலன்றோ
உறங்கிக் கிடந்தால் எதுவாகும் அது 

உண்ணத் தகுமாமோ

கலையும் கண்ணாய் கொண்டவரில் பல

கருத்தும் எழும்வீழும்
காணும் இவையும் சுவைகூட்டும் கலை 

கனிந்தே இனிதாகும்
மலையின் உயரம் இருந்தாலும் குறை 

மனதில் வளராமல்
மாறிக் கலையாய் தருவதிலே அம்

மலர்கள் சிறந்தோங்கும்

மலர்கள் என்றும் சுடுவதில்லை கலை
மனதும் அதுபோலும்
மாற்றம் வாழ்வின் நிரந்தரமே நம் 

மனதும் அதுகொள்ளும்
புலமை பொங்குமுணர்வதிலே வெகுபு

திதாம் நதிவெள்ளம்
புரளும், மனதின் எண்ணங்களைப் புடம்

போட்டே எழிலாக்கும்
 

மலர்கள் பலவாம் பலநிறமே அதன் 
முரணே அழகாகும்
மணங்கள் கவிதை எனவாகும் அவை 

தமிழின் பொதுவாகும்
பலதும் கவிதை உணர்வுகளும் பல 

வண்ணம் கொண்டாலும்
பழகும் தமிழே ஒன்றாகும். மணம்

பரவச் சுகம்காணும்
*******

No comments:

Post a Comment