Friday, August 3, 2012

தீ யெரிந்த பாதை

    
ஒளியிருந்த திசையை நோக்கி ஓடினேன்
உள்ள இருள் விடியும் நம்பித் தேடினேன்
பழியிருக்கும் போலப் பாதை தோன்றுதே
பகலினொளி பார்த்து  மனம் ஏங்குதே
வழியிருக்கும் என்று எண்ணிஓடினேன்
வாசமிடும் மலர்களெ ன்று தேடினேன்
குழிருக்கும் போலப் பாதை தோன்றுதே
குடியிருக்க வீடு எங்குமில்லையே!

தளை யெடுக்க வென்று பயிர் நாட்டினேன்
தண்மை நீருமூற்றி மனம் தேறினேன்
விளையும் போலத் தோற்றம் காணவில்லையே
வினைகள் ஏது வெளிச்சம் காணவில்லையே
மழைவிடத்தூ வானம் மாறாக் காண்பதேன்?
மஞ்சள் சிவப் பென்று மாறுங் கோலமேன்?
தலையிற் பட்ட அம்பி னாலே மானது
தரைவிழுந்த  துள்ள லுள்ளம் காணுதே!

துளையெடுக்கும் வேதனையும் ஏதையா?
துன்பமென்று எண்ணும் நிலை ஏனையா?
மலையடுக்கில் மண்குவியல் தேறுமா?
மாற்றம் கண்டு மயங்குவது மேனையா?
தலையெடுக்கும் வேளையினித் தகமையைத்
தனியேமனம் கொண்டு நலம் காணுவோம்
விலை கொடுத்து வாங்கத் துயர் மலிவெனில்
வீணிலதை விட்டு பாதை ஏகலாம்

மறதியென்று ஒன்றை யீந்த ஆண்டவன்
மனதில் வைத்த கோலமேது மாற்றுவோம்
பிறவி என்று பூமிவந்த பிழையய்யா
பிறந்த பின்னே பாசம் அனபு தவறய்யா
கறந்த பாலைக் குடிக்கப்பசி காணலாம்
காண்பவரில் நன்மை கறந் தேற்பதோ
இறந்து போகும்வரையுந்  துன்பம் இயல்புதான்
எதுவென் றாலும் தூக்கி எறிந்தேகுவோம் !!

No comments:

Post a Comment