Saturday, August 11, 2012

சிவந்த மண்

சொல்லிச் சிவந்தன பாவலர் எண்ணம்
சுமைந்து சிவந்தன  ஏழைகள் நெஞ்சம்
கிள்ளிச் சிவந்தது பிள்ளையின் கன்னம்
கேட்டுச் சிவந்தன  ஈழவர் உள்ளம்
எள்ளிச் சிரித்திடும் எம்மவர் கூட்டம்
ஏய்த்துப் பிழைத்திட இன்செயல்கண்டு
கொள்ளிச் சிவப்பெனக் கண்டனளெங்கள்
கோலமுகத்தமிழ்  ஈழ  மெம் அன்னை

ஓடிச் சிவந்தது மேலடி வானம்
உண்மை விட்டே நீதி சாய்ந்தது பூமி
நாடி திரிந்ததை நம்பியும்கெட்டோன்
நாட்டை இழந்து நலிந்து சிவந்தான்
கூடிக் கனல் எழக் கத்திய மாந்தர்
கொண்டகுரல்வளை நொந்துசிவக்க
வாடிச் சிவந்துடல் வீரத்தின் மைந்தன்
வாழ்வைத் துற்ப்பன் என்றே பசி காத்தான்

தேடிச் சிவந்தனர் தேசத்தின்  மைந்தர்
தீண்டச் சிவந்தது தென்படை தீயில்
மூடிச் சிறையிடை மூர்க்கரும் கொல்ல
மேவிச் சிவந்தது மேனிகள் ரத்தம்
கூடிகிடந்தமண் குடிசைகள் தீயை
கொண்டு சிவந்திட குமுறிய மாந்தர்
வேடிக்கையென்று சிரித்தது பூமி
விதியிதைக் கண்டு  சிவக்குமோ நீதி?

******************

1 comment:

  1. சிந்திக்க வைக்கும் வரிகள்... நன்றி...

    ReplyDelete