கனியோடு சுவைசேர்ந்த இன்பம் - நற்
கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை - எனப்
படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே - அதில்
தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே - இந்த
உலகத்தின் எனை வாழ விட்டான்
வரியாகப் பலகோடு வைத்து - அதில்
வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று - ஏன்
புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும் = அதில்
புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
பிறை சூடும் இறைதந்த சொந்தம்
மனிதா நீ ஏனிங்கு வந்தாய் - உன்
மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது - அது
தண்ணீரில் முகம் காணல் போலும்
பலகோடி வருடங்கள் ஆகி - இப்
பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்- அவன்
பறித்திட நின்றிடும் ஆட்டம்
புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
சுகம்யாவும் வெறுமையென் றாகும்
மலர்மேனி தொட்டிட்ட இன்பம் - நல்ல
மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
பனிமேடை கனல்கொண்ட தாகும்
கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை - எனப்
படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே - அதில்
தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே - இந்த
உலகத்தின் எனை வாழ விட்டான்
வரியாகப் பலகோடு வைத்து - அதில்
வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று - ஏன்
புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும் = அதில்
புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
பிறை சூடும் இறைதந்த சொந்தம்
மனிதா நீ ஏனிங்கு வந்தாய் - உன்
மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது - அது
தண்ணீரில் முகம் காணல் போலும்
பலகோடி வருடங்கள் ஆகி - இப்
பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்- அவன்
பறித்திட நின்றிடும் ஆட்டம்
புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
சுகம்யாவும் வெறுமையென் றாகும்
மலர்மேனி தொட்டிட்ட இன்பம் - நல்ல
மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
பனிமேடை கனல்கொண்ட தாகும்
கனியோடு சுவைசேர்ந்த இன்பம் - நற்
ReplyDeleteகலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை - எனப்
படைத்தானே இறைவன்,
அருமையான இன்பக்கனவுகள்.. பாராட்டுக்கள்..
பாராட்டுகள் கவிதைமலர் செடிக்கு ஊற்றும் நீர் போன்றது. தங்களுக்கு மிக்க நன்றிகள்!
ReplyDelete-கிரிகாசன்