Thursday, March 10, 2011

காதல் கயவர்



காதல்கவிதை தனியான பக்கத்திலுண்டு

விரும்புபவர்கள் செல்ல காதலின் ஓசை 

http://kathalkuyil.blogspot.com/





பூவைக்காண மோகம் கொண்டு போகும் தென்றலே
 போதை கொண்டு கூடிஆசை போன பின்னரே
தேவையில்லை என்றுவிட்டுத்  தள்ளிச்சென்றதேன்
 தீயில்வெந்த தாகப் பூவும் தீய்ந்து வாடுதே

ஓடிவானில் நீந்திப்போகும் ஒற்றைமேகமே
  உண்மை காதல் கொண்டுநீயும் வெண்ணிலாவையே
தேடிவந்து முத்தமிட்டதென்றே எண்ணினேன்
  தென்றல்போல நீயும் விட்டுத் தூரச் சென்றதேன்

நீரிலாடும் ஆம்பல்மீது நின்றுதேனையே
  நீயும் உண்டுஇன்பம்காணல் நேர்ந்த பின்னரே
சேரும் எண்ணம்நீங்கி நீயும் செல்வதேனடா
  சில்லென்றூதும் வண்டே நீயும் செய்வதென்னடா

காலைவந்து வானெழுந்த காதலாதவன்
கோலம் போடும் நீரலைகள் கொண்டதாமரை
மேலெழுந்த பூமுகத்தை வாடசெய்யவதேன்
மாலைதன்னில் போயொழிந்து மோசம் செய்வதேன்

காலம் சொல்லும்நீதி எங்கும் கயமைதானடா
 காவல் செய்ய யாரும்,இல்லை கண்ணீர்தானடா
ஞாலமெங்கும் நேர்மை காக்க யாருமில்லையா
 யாரைநானும் குற்றம் சொல்ல யாவும் தெய்வமா

பூவில் வண்டில் புள்ளி னத்தில் போயும் மக்களில்
தாவி ஒன்றோடொன்றில் இன்பம் தேட வைத்ததேன்
தூவி நெஞ்சில் காதல் என்னும் தூபமிட்டவன்
தேவி,பெண்மை தோல்வி என்றால் தீமை காண்பதேன்


காதல்கவிதை தனியான பக்கத்திலுண்டு

விரும்புபவர்கள் செல்ல காதலின் ஓசை 

http://kathalkuyil.blogspot.com/

1 comment:

  1. //காலம் சொல்லும்நீதி எங்கும் கயமைதானடா
    காவல் செய்ய யாரும்,இல்லை கண்ணீர்தானடா
    ஞாலமெங்கும் நேர்மை காக்க யாருமில்லையா
    யாரைநானும் குற்றம் சொல்ல யாவும் தெய்வமா//

    arumai..vaalththukkal

    ReplyDelete