Tuesday, March 29, 2011

பிரியாத வரமொன்று வேண்டும்

மலர்மீ திருந்து மணம்வேறு சென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து உணர்வென்னும் தாகம்
பிரியாத வரமொன்று வேண்டும்

அலைமீ திருந்து குளிரான தென்றல்
அசைந்தோடி பிரிகின்ற போதும்
கலைமீது கொண்ட எனதாசை என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தொலை வானிலுள்ள நிலவான தொருநாள்
வரவானில் மறந்திட்ட போதும்
விதையான மைந்தர் மனஉறுதி யென்னை
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

தலைமீது மின்னல் இடியாகி துன்பம்
ஒருதாகி விழுகின்ற போதும்
உருவாகுமீழம் எனும்ஆசை நெஞ்சில்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

மலையான தொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும் போதும்
உருவாகும் ஈழ எனசேரும் மக்கள்
பிரியாதவரம் ஒன்று வேண்டும்

No comments:

Post a Comment