கலைவான முகிலோடிக்
. காற்றூதும் வெளிதாண்டிக்
. கடந்து நான் பறந்திடவேண்டும்
வலைபோலும் விளைந்தாடும்
. வானத்துச் சோதிக்குள்
. வகையென்ன புரிந்தாக வேண்டும்
நிலையான தவையேது
. நிலையற்ற பொருளேது
. நிகழ்வான நான்காண வேண்டும்
தொலைவான மதிகண்டு
. தூரத்துச் சுடர்தாண்டித்
. தொலந்தின்னும் முடிவேக வேண்டும்
குலைந்தோடும் அனல்வாகு
. குளிர்ந்துபின் புவிபோலும்
. குடம்செய்யும் தொழில்தானும் கல்லில்
சிலைசெய்யும் கலைஞானி
. செயலொத்த தொழில்தன்னை
. செயும்சக்தி திறன்காண வேண்டும்
அலைந்தெங்கும் புதிர்கண்டு
. அதன்பயன் அறிந்தங்கு
. எழில்கொண்ட வானத்தில் நின்றே
உலைகொண்ட தீயோடு
. உருவஞ்செய் பிரம்மனின்
. உயர்சக்தி எவைகாண வேண்டும்
அலைமீது விழிதூங்கும்
. அருஞ்செல்வம் தருமன்னை
. அவள்கொண்ட மணவாளன் காணும்
நிலையென்ன காப்பவன்
. எதையிங்கு காத்தனன்
. நலம்கண்டு நான் கொள்ள வேண்டும்
தலைகொய்தே உயிர்வாங்கி
. தருமத்தின் தேவனாம்
. எமனுக்கு இடம்காட்டும் தேவன்
விலைகொண்ட உயிருக்கு
. வகையுண்டோ வாழ்வுக்கு
. வழியென்ன என வார்த்தை கேட்டும்
ஒலிவானில் ’ஓம்’மெனும்
. ஓங்கார இசையோடு
. உருண்டிடும் கோளங்கள்மீது
கிலிகொள்ளும் வெடியென்ன
. கிளம்பிடும் புகையென்ன
. கிழக்கென்ன மேற்கென்ன கண்டும்
வலிகொண்டு இழுத்தோடும்
. வகையென்ன காந்தங்கள்
. வரிசைக்கு வைத்தென்ன சக்தி
மலிவென்று இத்தனை
. மாபெரும் அண்டத்தில்
. மனம்கொண்டு இயல் செய்ததெல்லாம்
குலைந்திடா வண்ணமோர்
. குறையின்றிச் செய்துமிக்
. கோளமாம் புவிதன்னை மட்டும்
இலையொன்றும் விதியென
. இவரெண்ணி அவரெண்ணி
. இட்டதே சட்டமென்றாக்கி
புலைஉண்டு பெண்தொட்டு
. புலன்கெட்டுப் பகைகொண்டு
. பித்தனென்றாடி அழிக்கும்
நிலைகொள்ள விட்டவள்
. நிம்மதிகண்டதென்
. நினைவென்ன நான் காணவேண்டும்
. காற்றூதும் வெளிதாண்டிக்
. கடந்து நான் பறந்திடவேண்டும்
வலைபோலும் விளைந்தாடும்
. வானத்துச் சோதிக்குள்
. வகையென்ன புரிந்தாக வேண்டும்
நிலையான தவையேது
. நிலையற்ற பொருளேது
. நிகழ்வான நான்காண வேண்டும்
தொலைவான மதிகண்டு
. தூரத்துச் சுடர்தாண்டித்
. தொலந்தின்னும் முடிவேக வேண்டும்
குலைந்தோடும் அனல்வாகு
. குளிர்ந்துபின் புவிபோலும்
. குடம்செய்யும் தொழில்தானும் கல்லில்
சிலைசெய்யும் கலைஞானி
. செயலொத்த தொழில்தன்னை
. செயும்சக்தி திறன்காண வேண்டும்
அலைந்தெங்கும் புதிர்கண்டு
. அதன்பயன் அறிந்தங்கு
. எழில்கொண்ட வானத்தில் நின்றே
உலைகொண்ட தீயோடு
. உருவஞ்செய் பிரம்மனின்
. உயர்சக்தி எவைகாண வேண்டும்
அலைமீது விழிதூங்கும்
. அருஞ்செல்வம் தருமன்னை
. அவள்கொண்ட மணவாளன் காணும்
நிலையென்ன காப்பவன்
. எதையிங்கு காத்தனன்
. நலம்கண்டு நான் கொள்ள வேண்டும்
தலைகொய்தே உயிர்வாங்கி
. தருமத்தின் தேவனாம்
. எமனுக்கு இடம்காட்டும் தேவன்
விலைகொண்ட உயிருக்கு
. வகையுண்டோ வாழ்வுக்கு
. வழியென்ன என வார்த்தை கேட்டும்
ஒலிவானில் ’ஓம்’மெனும்
. ஓங்கார இசையோடு
. உருண்டிடும் கோளங்கள்மீது
கிலிகொள்ளும் வெடியென்ன
. கிளம்பிடும் புகையென்ன
. கிழக்கென்ன மேற்கென்ன கண்டும்
வலிகொண்டு இழுத்தோடும்
. வகையென்ன காந்தங்கள்
. வரிசைக்கு வைத்தென்ன சக்தி
மலிவென்று இத்தனை
. மாபெரும் அண்டத்தில்
. மனம்கொண்டு இயல் செய்ததெல்லாம்
குலைந்திடா வண்ணமோர்
. குறையின்றிச் செய்துமிக்
. கோளமாம் புவிதன்னை மட்டும்
இலையொன்றும் விதியென
. இவரெண்ணி அவரெண்ணி
. இட்டதே சட்டமென்றாக்கி
புலைஉண்டு பெண்தொட்டு
. புலன்கெட்டுப் பகைகொண்டு
. பித்தனென்றாடி அழிக்கும்
நிலைகொள்ள விட்டவள்
. நிம்மதிகண்டதென்
. நினைவென்ன நான் காணவேண்டும்
வரிகள் அழகு...
ReplyDeleteஎல்லாமுமே நடக்க வேண்டும்...