Thursday, September 20, 2012

புதிர் கவிதை (விடையும் விளக்கமும்)



புதிருக்கு விடை


மூன்றாவது அடி

வரவை அறியாதவளை ’வடிவில் ஒன்றும்
மலராய் கண்டே’ எனப் பொருள் கொள்க



மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்

சூரியனும் சந்திரனும் சேர்ந்தால் (நேர்கோட்டில்)அமாவாசை . அது போல் என்மதிமுகமும்  சிந்தனை அறிவும் சேர்ந்ததால் இருள் வந்ததோ என்று  ஒரு பொருள் படப் பேசுகிறாள்


.  முதற் கேள்வி

1. தாகம் கொண்டான். தண்ணீர் கேட்கிறான்  அவள் நீர் அள்ளிக் கொடுகிறாள்.


இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
//காகம்// கரையும்    


கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்
முதல் நான்குவரியிலிம்சொல்லப்படுவது காகம்
’கா’’தா’ல் கொள்மின் என்றதால் கா எழுத்து தா வாக மாறுகிறது.அதனால் தாகம்

தாகத்துக்குக் தண்ணீர் கேட்கிறான்.

விடை

விடை
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
மாதம் நாளும் ஒன்றாம்--// திங்கள்/ மாதத்தின் பொதுபெயர் நாளுக்கும் உண்டு
வந்தால் மறுநாள்--//செவ்வாய்’//
இருந்தோர் நகை //புன்னகை// (சிவந்த வாயிலிருந்து ஒரு புனகையை வீசி

பின்னர்
இதனைக்கொள்வீர் ”நீர்” என்றாள்-- //நீர். தண்ணீர்//
***************************
இரண்டாவது புதிர்க் கேள்வி

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
விடை மா (கனி ஈயும்)
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
விடை
மாமா (மாமன் பெண்)- கன்னி

/அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்/
(கனி - கன்னி) விடை
மெய்யெழுத்து வித்தியாசம்
கன்று மா என்று கத்தும் விடையல்ல

அவள் கூற்று
வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே

வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
இதுவும் வழக்கமாக நான்செய்வதுதான்

’விழி’ கொள்ளும்
’விதியில்’ காணும் பொது //வி//
வேகம் முன் வைத்தால் //விவேகம்//
***
விடை கூறுகிறாள்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்
அவள் என்னை என்று கன்னி யை குறிக்கிறாள்.
*****************
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

பூவின் தோழன் காற்று. பிரிக்கும் பொருள் பூவிலிருந்து மணம் எடுத்துகொள்ளும். அதன்படி உன்னை மணம் செய்து கொள்வேன் என்கிறான்
***
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்
நாலில் ஒன்று ( கால்) குளத்தில் கால்வைத்து நிற்கிறாள்

No comments:

Post a Comment