Thursday, April 21, 2011

ஞானத்தைத் தேடி..!

ஞானம் மனம்தேடும் ஒளிதானும் விழிகாணும்வரை
நானும் அலைந்தேனே தினமும்
தானம் தருமங்கள் இவைதானு முதவாதே பிர
தானம் ஒருசேரும் மனமே
வான மதில்நீந்தும் விரிவாழ்வும் இருளாகும் உயிர்
தானும் உனைநீங்கும் பொழுதே
மோனம் கதியாகும் அம்மோட்சம்முடிவாகும் ஒளி
காணும் நீ ஒன்றாகிடவே

கானம்எழும் சோலைதனில் காணும்கிளிதானும் கனி
தேடும், மனந்தானும் அதுபோல்
கூனும் குழிகொள்ளுமிரு கண்ணும் நரைதன்னுமொரு
கோலம் என ஆகும் முதலே
வானம்அதில் ஞானமெனும் தீபம்தனை நாடும் அதை
வாழ்வில் பெறஆசை கொளவே
தேனும் இனிதாகும் உயிர்தேடும் ஒளிவெள்ளம் அது
தேகம் நிலைகொளும் வரையே

விடியு ஒருகாலை விரிவானில் பகலோனும்
வெளிகாணும் மனதோடு எழவே
நொடியில் ஒருசிதறல் என்நினைவில் ஒருபொறியானது
நிகழப் பெருமாற்றம் கண்டேன்
வெடியும் எரிமலையும் எனவிளையும் பெருந்தீயானது
வெள்ளம் என உள்ளே திகழ
கடிதும் பெரிதுலகம் அதை காணா தனைச் சுற்றிபெருங்
கதிரோ னொளிபெறுதே தகுமோ

காணும் சுழல்ஞாலம் அது தேடும் ஒளிவானில்
அதனூடே பெருந்தீயே எரிதே
வீணும் வெளிதேடிக் குணம்மாறிப் பிணமாகும்வரை
வீழ்ந்தே எழுவோமே சரியோ
காணும் மனம்தானும் ஒளிகண்டே யதிற்கூட,வெறுங்
காயம் ஒரு துன்பம்படினும்
பேணும் உயர்ஆன்மா அப் பேராமொளிதன்னில் பெறும்
ஞானம் உனைக் காக்கும் பெரிதே!

No comments:

Post a Comment