Wednesday, November 17, 2010

நிலவு தாங்குமா?

அந்த வானத்திலே ஓர் வெண்ணிலவு -அது
தேனொளி கொட்டியது-
அதன் வாழ்க்கையிலே ஒரு சோகமுண்டு
அது மேகத்தில் மூடியது
கண்மூடிநின்றேன் அதுமுட்டியது
என் மூச்சிலும் சுட்டதது
கலி காலத்திலே சில கட்டளைகள்
அதைத் தேயவும் வைக்கிறது


அது கோலத்திலே முழுவட்டநிலா மனம்
குழந்தையின் மென்மையது
ஒளி கொட்டுவதில் பெரு முழுநிலவு அது
கொண்டதுஇருள் உலகு
சில நேரத்திலே அது குறைநிலவு அது
தெய்வத்தின் கொடுமையது
எந்தக் காலத்திலே ஒருவிடிவுவரும் தீங்
கனவுகள் மறைவதற்கு

மன சோகத்திலும் ஒருஇன்பமுண்டு எனச்
சொல்பவர் பலருமுண்டு
வான் மேகத்திலே கார்முகிலெழுந்தால் இடி
மின்னலும் முழக்கமுண்டு
எம் தேகத்திலே ஓர்கிலியெழுந்து மனம்
திக்கென ஆவதுண்டு
அந்த தேன்நிலவானது தாங்கிடுமா -அது
மேகத்தின் பக்கமுண்டு

No comments:

Post a Comment