Thursday, November 18, 2010

ஏங்கவைத்த பொற்காலம் (நகைச்சுவையாக)

ஏங்கவைத்த பொற்காலம்  தலைப்பில் வேடிக்கை எண்ணி மாற்றி எழுதிப்பார்த்தது

பொன்னு வனத்திலோர் பாண்டி -அவன்
போயொரு நண்பனின் வீட்டினில் தேடி
நன்கவிநூல் ஒன்றைவாங்கி -அதை
நாலுநாள் என்றே இரவலும் கூறி
தன்னுடை இல்லமும் வந்தான் -அதைத்
தேடியோர் பக்கத்தில் பத்திரமாக்கி
பின்னர் படித்திட எண்ணி விட்டு
போய் முகம்நீரில் கழுவிடச்சென்றான்

கட்டிய வள் அதைக் கண்டாள் -எண்ணிக்
காரணமேது மறைத்திட வென்றே
எட்டி அதைக் கையில் தூக்கி -அதன்
இட்டபெயர் கண்டாள் பொற்காலமென்று
குட்டிக் கவிதைகள் கண்டே- அதைக்
கொண்டுபோய்த் திண்ணையில் நின்றுபடித்தாள்
சற்று மணித்துளி செல்ல பாண்டி
சத்தமிட்டே கூவ பொற்கவிநூலை

வைத்துவிட்டு உள்ளே சென்றாள் =அங்கு
வந்த பழம்நூலை விற்றிடும் பையன்
சத்தமில்லாமல் கைக்கொண்டு -கணம்
சந்து தெருவில் மறைந்தவ னானான்
பித்துப் பிடித்துக் கணவன் - கோபம்
பேச்சில் எழுந்திடக் கண்டு சிலிர்த்தாள்
வைத்தநூல் எங்கேடி போச்சு என்ற
வார்த்தை கேட்டுத் திரும்பி நடந்தாள்

அள்ளி வீசும் சினம் கண்டு -அவள்
ஆடிப் பயந்து திண்ணை திரும்ப
கொள்ளி அனல் சுட்டதாக வாய்
கொஞ்சமலறித் திகைத்துமே நின்றாள்
அஞ்சிக் கலங்கிட நின்றாள்- நெஞ்சை
ஏங்க வைத்த பொற்காலம் ஈதெங்கே
கொஞ்சம் அலறலைக் கேட்டு -அயல்
கூடி வந்தவனை ஏக்கத்தில் பார்த்து

அஞ்சுகம் நெஞ்சு துடிக்க -- ஏங்க, (என்னங்க)
வைத்த பொற்காலம தெங்கேதான்போச்சு
மிஞ்சி ஒருமுறைதாண்டி நம்மை
ஏங்க வைத்தபொற் காலம் வந்தேகும்
கெஞ்சி கூத்தாடியே வாங்கி நானும்
கொண்டு வந்தேன் பாரு உன்னையும்நம்பி
அஞ்சு வயதினில் இல்லை -இன்று
வந்த பொற்காலமும் போச்சடி என்றான்

No comments:

Post a Comment