Tuesday, November 30, 2010

மைந்தர் புகழ் பாடுவேன்!

வெள்ளிமலை போலுயர்ந்தோர் வீரத் திருவுருவும்
விளை முரசமொடு சங்கதும்
துள்ளியெழு யென்றூதத் துடித்தேயெழும் சூறை
சுழல்வேகம் கொண்ட மைந்தர்
அள்ளியெடுஎன்றவனும் ஆணையிடஅள்ளுமவர்
அலைகடலின் ஆழிநடமாய்
கொள்ளியிட குறைவிரலும் மில்லையெனக் கதறியே
கூடியழசெய்த குலத்தீர்

வன்னியை அழித்ததோர் வஞ்சனையின் பேய்களெம்
வாழ்வதனைச் சீரழித்தும்
கன்னியர் பெண்கொடுமைக் கொலைவெறிஞர் கயவர்படை
காதகர் கள்ளர்தாமும்
இன்னும் எழில்கொண்டுநல் இன்பவாழ் வெய்தும்நிலை
இருந்திடக் கண்கள்மூடி
சின்னவரென் றேதும்வழி தெரியோமே அறியோமாய்
சிலையாகி நிற்பதாமோ?

சிறுமனது பெருங்கயமை சேர்ந்த குறுஞ்சிங்களத்தர்
செய்தமிழ் கொடுமையாவும்
பொறுக்குமோ என வெகுளப் புரண்ட மாகடலாகி
பிழைகொண்டோர் களமாடியும்
வெறுத்தவரை வீடேக வைத்தவரும் வெஞ்சினமே
விளையாடிப் பந்துமடித்து
குறுகுறெனப் படைகொண்டு குலைநடுங்க வைத்தவர்தம்
கூறுபுகழ் என்னுரைப்பேன்

மலைபோன்ற மைந்தர்திடம் மாமலைகள் கண்டிழிந்து
முகில் கொண்டு தனைமூடிடும்

கலைந்து பெரும் பகைஓடும் கார்த்திகையின் மைந்தர்தம்
கண்ணசைவில் மின்னல் பறக்கும்
அலைந்துவரு தென்றலொரு கணமிருந்து அதிசயித்து
அடஎன்று மருண் டோடிடும்
வளைந்தோடும் நதி நெஞ்சு நிமிர்ந்த இவர்நிலைகண்டு
வழிதிருத்தி நேர்ஓடிடும்


செழித்த திமிர்கண்டு சிறுகாளைபயந் தயல் ஒதுங்க
செல்வழியின் அதிர்வுகண்டு
வழிதன்னில் நின்ற மயில் வானமிடி யோசையென
வரும் மழைக்கு நடனமாடும்
பழித்ததொரு குரங்கோடி பார் இதுவே வீரமென
சிறுத்தை தனைக் கேலிபுரியும்
அழித்தபகை காணச்சுடர் ஆதவனும் நள்ளிரவில்
உதித்தவிதம் ஊரும்பசப்பும்

கொதித்தபால் தமிழ் பொங்கும் கோலமதில் நாணிவிட
குளிர்ந்திடும் காலத்தேவன்
விதித்தவிதி வீரரவர் நேர்மைகண்டு எதிரி தலை
விதி உந்தன்கையில் என்கும்
உதித்தகதிர் தலைவனின் ஒளிகண்டு தம்பியிவ
னென்று தன்கதிர்கள் என்னும்
கொதித்தகரம் கொண்டன்பில் அரவணைக்க புவியோடி
குளிர்வேண்டி சுழன்றுதப்பும்

இளையமல ராய்ஒடிந்த தெமதீர மைந்தர் துயில்
இல்லமாம் இனியசோலை
விளைவீரத் தவச்செல்வர் வீடுகளை தொட்டழித்து
வீரமென தட்டிமார்பும்
கோழைமனங் கொண்டவரை குறுநிலத்து களைநீக்கி
கொண்டாடி ஈழமமைக்கும்
நாளை எதிர்பார்த்திங்கு நாமெழுந்து வழிகண்டு
நடந்தோமே விடிவுபிறக்கும்

கண்டிடுவோம் ஒன்றாகக் காலமதின் கனிபழுக்கும்
காற்றெழழுந் தெங்கள் திசையில்
கொண்டோடும் ஈழரசின் கொள்கைதனை கூறஅதில்
கொண்டநிலை உலகமேற்கும்
அண்டமும் அகிலமதும் அதிசயிக்கும் ஓராட்சி
அமைந்திடும் மீண்டும் பிறக்கும்
வென்றிடும் தமிழீழத் தனியரசு விரைவாக
மைந்தரே நின்றுபாரும்.

No comments:

Post a Comment