Sunday, January 29, 2012

பன்னிரண்டாம் ஆண்டு- 2012

பன்னிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லை வேலா - எம்
கண்ணிரண்டும் நீர்வழிந்தும் காக்கவில்லை சீலா!
முன்னிருந்த ஆண்டும் எந்த மூச்சுமில்லை  போக -  இப் 
பன்னிரண்டு பூத்த தெங்கள் பாவம் நீக்கிப் போமோ?

மண்புரண்டு ஓலமிட்டு  மானம்விட்டு வீதி - பல
எண்கடந்து கூடி நின்று ஏக்கமுற்று வேண்டி
விண் ணெழுந்த கூச்சலிட்டும் வீணென்றாக மேனி -தான்
துண்டிரண்டு ஆக்கவிட்ட  துயர்நிறைந்த ஆண்டு!

கண் நிறைந்த வாணமின்னல் கண்டுபூமி துள்ளும் - நல்
வெண் நுரைத்த பானமுண்டு வேடிக்கையும் செய்யும்
மண்ணிழந்து மாந்தர் வீடு மக்கள் யாவும் ஈந்தும் - எமை
விண் பறந்து ஆவியென்று விட்டு கண்டு மகிழும்

பன்னிரண்டென் றாண்டுதன்னும் பார்வை தந்து எங்கள்  இருள்
கண்ணிரண்டில் கொண்ட வாழ்வு காக்கவேண்டும் வேல
மண்ணிருந்த ஆட்சி, மன்னன், மக்கள் மானவாழ்வு -  இனும்
பொன்திரண்ட பூமிதந்து  போகவேண்டும் வேலா!

No comments:

Post a Comment