சுந்தரத் தமிழ்கொடுத்த சீரெடுத்து வானிலே
அந்தரத்தி லாடுதுள்ளம் ஆனதென்ன வாழ்விலே
சிந்தனைக் குடம் வெடித்து சீறும் நீரினூடிலே
வந்துமென் கவிக்குழந்தை வாழ்வுகொள்ளக் காணீரோ
சொந்தமோ சிவந்தரத்தம் சூடளிக்கும் யாக்கையில்
எந்திரம் எடுத்த உள்ளம் என்றி ருப்பின் ஆனதோ
மந்திரப் பொடிஉதிர்த்து மாயமென்ன செய்யவோ
இந்தலோக வாழ்விலேது இன்பம் பொய்த்த லாகுமோ
சந்தியிற் சிரிக்கும்வாழ்வில் சிந்தனை பொறித்திடா
விந்தைதூண் நிறுத்தி அன்புவீட்டில் கல்லடுக்குவோம்
சந்தோசக் கதிர்எறிக்கு மின்பச் சேற்றின் பங்கயம்
அந்திவா னெழுந்த சந்திர னல்லியென்ப தாகுவோம்
கர்வமோ டெழுத்து வாளைக் கைசுழற்றி ருத்திரன்
பர்வதச் சிவன்சினந்து பண்ணுகின்ற நாட்டியம்
தர்மமென் றெழுந்துநாமும் தக்கதோமென் றாடிடா
மர்மவானைச் சுற்றும்பந்தில் மானிடத்தைக் காணுவோம்
*********************
No comments:
Post a Comment