Wednesday, February 1, 2012

சக்தி ! சக்தி!! சக்தி!!!


திருநட மிடுமென் னறிவெனுங் கருவில்
உருவமின் றிருப்பவளே
இருளெனு மாயை இதுவரை கண்டேன்
தருமொளி பெரிதுனதே
வருமிடர்கொண்டே பகையுற யிரும்பில்
துருவென உருவழிந்தேன்
பெருமளவாக இருமன துழலும்
செருகினி லெனையிழந்தேன்

ஒருமையில் மனமும் உள்ளொளி தானும்
தருசுடர் எனவருவாய்
எருதினில் ஏறும்  தருமனும் உயிரை
வெருகிடப் பெற முதலாய்
மருவியென் அறிவை தருவதில் குறையை
ஒருபொழு தினிகுறையாய்
சருகெனக் கருக முதலலுரு மாற்று
தருவினில் கனியெனதாய்

உருவினி லன்பும் பெருமையு மறிவும்
வருமுன திருமனதால்
தெருவினில் வீழும் சொரி பனியாக
உருகிட முதலறிவாய்
மருகிடு மனதில் மாற்றமுந் தந்து
மெருகினை யுடைமனதாய்
அருகினில் வருவாய் ஒருதென தாயாய்
இரு எனை வழிநடத்தாய்

அருவியு மாழி இருதிசை செல்லும்
ஒருங்கிடு மதிலிணையும்
பருவமும் கொள்ளக் கருமுகில் மின்னும்
பெருமழை புவியணுகும்
முருகெனும் தமிழும் அரும்பொரு ளிசைய
தரும்வித மெனைதெரிவாய்!
இருமனக் குருவாய் கருமமும் நிறைவாய்
பெருகிட அருள்புரிவாய்!

No comments:

Post a Comment