Sunday, February 5, 2012

இணையக் கடலில் நீந்தி

        

அவள்;
காடுமாலை சுத்திவந்த காத்துப்பட்டுதோ -இல்லை
கண்டபேய்கள் மோகினி உன் கைபிடித்ததோ
நேத்துவந்த மூத்தமாமி கண்ணுபட்டுதோ -நீயும்
ராத்திரிக்கு நாலு தும்மல் போட்டதேனையா

அவன்:
காத்துமில்ல கருப்புமில்ல கண்ணு செல்லமே -ஒரு
கற்பனையும் தேவையில்லை கவலைகொள்ளாதே
நேத்துவலை வீசி நானும் இணையசாகரம் -மூழ்கி
நின்றதாலே தும்மல்   நாலு போட்டேன் கேளடி

அவள்;
ஆத்து மீனு சந்தையிலே அள்ளக் குவியுது -நீயும்
அலைஞ்சு வலை போட்டதாலே என்ன ஆச்சுது
நேத்து நீரில் நின்றதாலே நெத்தி சுடுகுது -கொஞ்ச
நேரம் சொல்லு கேக்க வேணும் நெஞ்சுதுடிக்குது

கூத்தடிச்சுக் குளிரில்நின்னு தேகம் கெட்டுது -நீயும்
கொண்டதூக்கம் ராத்திரிக்கு பாதிபோச்சுது
மாத்தி மாத்தி கணனி போட்டு காலம்போகுது -இந்த
மாமன் செய்யும் சேட்டைகாணக் கவலையாகுது

அவன்:
ஊத்து நீரு தண்ணி என்று உளறி வைக்காதே=-நானும்
ஓடிநீரில் நீந்தவில்லை உலக வலையிதோ
பாத்துநில்லு இண்டநெற்று போட்டுகாட்டுறேன் அடி
பாவி மீனுக் காகவில்லை பாட்டு எழுதுறேன்

பாட்டு நாலு எழுதி நெற்றில் போட்டு வைத்தேண்டி -இதோ
பாரு உந்தன் துன்பம்போகும் விட்டுத் தள்ளடி
நெட்டில் எந்தன் பாட்டு பாரு போட்டிருக்கடி -அது
நீயும் வந்து காண உந்தன் நெஞ்சில் மகிழ்வடி

வாழ்த்துஎன்று சொல்லி என்னை வானம் தூக்கியே -பல
வண்ண மாலை போட்டதாக தேவைதைகளே
பூத்த வெள்ளி தாரகைகள் கூட்டமுன்னிலே -என்னைப்
போகவிட்டு இன்பமிட்டார் பொறுக்குதில்லையே

(துள்ளி ஆடுகிறார்)

அவள்:(மனதுள்)
பாவி இந்தமனுசன் புத்தி பேதலிச்சுதோ ஒரு
பைத்தியமோ குழந்தையாகக் கூத்தடிக்குதே
ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆனைமுகன் கோவில் போயி நூலுகட்டணும்

No comments:

Post a Comment