வானில் குழைத்தநற் சந்தணத்தில் - இட்ட
வட்டவடிவிலோர் குங்குமமாய்
வேனில் இளவெயில் சுட்டெரித்த - பின்னர்
வீழ்ந்து சிவக்கின்ற மாலையிலே
தேனில்இழைந்த நற்பூ தழுவி - வந்த
தென்றலே தேசம் நீ காணுவையோ?
ஆ..நில் அளவற்ற காதல்கொண்டேன் - அந்த
ஆசையை ஊரெங்கும் சொல்லிவிடு
மேனி கருத்து மயங்குகிறேன் - எந்தன்
மெய்யும் துடித்திடக் காணுகிறேன்
ஏனிந்தக் கோல மெடுத்துவிட்டே - னிந்த
ஏழை மனம்வாழ ஏது செய்வேன்
சா..நீயெனச் சொல்லிச் சத்துருக்கள் - எந்தன்
தாயென் மொழிதனைக் கொல்லுகிறார்
ஆ.இனி என்னதான் காதலென்று - என
தன்புடைத் தம்பியர் கேலிசெய்தார்
பூநெய்யின் மேலுற்ற வண்டெனவே - உயிர்
போலும் மிகுந்தொரு பாசமுற்றேன்
வானில் பறக்கும் பறவையென - எமை
வந்து தழுவிடும் காற்றுனைப்போல்
தேன்நிலவோடும் சுதந்திரத்தை - எங்கள்
தெள்ளு தமிழ் தேசம் கொள்ளவெனப்
போயின்னல் தீரப் புது உலகம் - செய்யப்
பூமியின் மேல் வெகு காதலுற்றேன்
மானின் விடுதலை மக்கள் பெற - மயி
லாடும் களிப்பினை நித்தம்கொள்ள
தாய்நீ தமிழே உன்செல்லமகன் - தமிழ்
தாய்நில மீட்பினில் காதல்கொண்டேன்
நானிலத்தில் இந்தக் காதல்வென்று - அதில்
நானும் பிழைதிடக் கூடிடுமோ
வாநீ தோழா, தமித்தேச மண்ணை - எங்கள்
வாழ்வு செழித்திடச் செய்குவையோ?!
மாநிக ரற்றநம் மண்ணினையே - மீட்டு
மாளும்தமிழ் பெற்ற பிள்ளைகளை
ஏனின் னும்விட்டு இருந்தனையோ - தம்பி
எல்லாம் அழியமுன் காவல் கொள்ளு
தாநீ எமதீழ மண்ணையென - ஒரு
தர்ம நிலைகொண்டு கேட்டிடுவோம்
போநீ யேதுமிலை என்றுசொன்னால் - பஞ்ச
பாண்டவராய் நீதி பார்த்திடுவோம்.
வட்டவடிவிலோர் குங்குமமாய்
வேனில் இளவெயில் சுட்டெரித்த - பின்னர்
வீழ்ந்து சிவக்கின்ற மாலையிலே
தேனில்இழைந்த நற்பூ தழுவி - வந்த
தென்றலே தேசம் நீ காணுவையோ?
ஆ..நில் அளவற்ற காதல்கொண்டேன் - அந்த
ஆசையை ஊரெங்கும் சொல்லிவிடு
மேனி கருத்து மயங்குகிறேன் - எந்தன்
மெய்யும் துடித்திடக் காணுகிறேன்
ஏனிந்தக் கோல மெடுத்துவிட்டே - னிந்த
ஏழை மனம்வாழ ஏது செய்வேன்
சா..நீயெனச் சொல்லிச் சத்துருக்கள் - எந்தன்
தாயென் மொழிதனைக் கொல்லுகிறார்
ஆ.இனி என்னதான் காதலென்று - என
தன்புடைத் தம்பியர் கேலிசெய்தார்
பூநெய்யின் மேலுற்ற வண்டெனவே - உயிர்
போலும் மிகுந்தொரு பாசமுற்றேன்
வானில் பறக்கும் பறவையென - எமை
வந்து தழுவிடும் காற்றுனைப்போல்
தேன்நிலவோடும் சுதந்திரத்தை - எங்கள்
தெள்ளு தமிழ் தேசம் கொள்ளவெனப்
போயின்னல் தீரப் புது உலகம் - செய்யப்
பூமியின் மேல் வெகு காதலுற்றேன்
மானின் விடுதலை மக்கள் பெற - மயி
லாடும் களிப்பினை நித்தம்கொள்ள
தாய்நீ தமிழே உன்செல்லமகன் - தமிழ்
தாய்நில மீட்பினில் காதல்கொண்டேன்
நானிலத்தில் இந்தக் காதல்வென்று - அதில்
நானும் பிழைதிடக் கூடிடுமோ
வாநீ தோழா, தமித்தேச மண்ணை - எங்கள்
வாழ்வு செழித்திடச் செய்குவையோ?!
மாநிக ரற்றநம் மண்ணினையே - மீட்டு
மாளும்தமிழ் பெற்ற பிள்ளைகளை
ஏனின் னும்விட்டு இருந்தனையோ - தம்பி
எல்லாம் அழியமுன் காவல் கொள்ளு
தாநீ எமதீழ மண்ணையென - ஒரு
தர்ம நிலைகொண்டு கேட்டிடுவோம்
போநீ யேதுமிலை என்றுசொன்னால் - பஞ்ச
பாண்டவராய் நீதி பார்த்திடுவோம்.
No comments:
Post a Comment