நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றி லொளிந்துநின்
றோடும் மதி சிரிப்போ .விழி
போலும் கயல்துள்ளும் பொன்னெழில் நீரலை
. போடும் நகைஒலியோ
வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அதன்
ஏழைச் சிரிப்பினைக் கண்டனயோ - கனி
. இன்சுவைப் புன்னகைத்தோ
கீழை வயல் மேடு கோபுரவீதியில்
கூடி நின்றாடும் மந்தி வந்து
வீழபொலிந்த கனிஉண்டு ஆனந்தம்
வேளை என்றாடியதோ
பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்து சிரித்தனவோ - இடை
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ
கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமதின் விழும்நீர் துளியில் பட்டு
வாட்டம் கலைந்தபடி
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களும்
. தாங்கிச் சிரிசிரித்து எழில்
ஆனதிந்தப் பெரும் பூமரச் சோலையும்
. ஆனந்தக்கூத்திடுதோ
அத்தனை கொண்ட சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளென்
. ரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
பத்தரைப் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச்சிரித்திடு
அற்புத பூமியிதே
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றி லொளிந்துநின்
றோடும் மதி சிரிப்போ .விழி
போலும் கயல்துள்ளும் பொன்னெழில் நீரலை
. போடும் நகைஒலியோ
வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அதன்
ஏழைச் சிரிப்பினைக் கண்டனயோ - கனி
. இன்சுவைப் புன்னகைத்தோ
கீழை வயல் மேடு கோபுரவீதியில்
கூடி நின்றாடும் மந்தி வந்து
வீழபொலிந்த கனிஉண்டு ஆனந்தம்
வேளை என்றாடியதோ
பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்து சிரித்தனவோ - இடை
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ
கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமதின் விழும்நீர் துளியில் பட்டு
வாட்டம் கலைந்தபடி
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களும்
. தாங்கிச் சிரிசிரித்து எழில்
ஆனதிந்தப் பெரும் பூமரச் சோலையும்
. ஆனந்தக்கூத்திடுதோ
அத்தனை கொண்ட சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளென்
. ரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
பத்தரைப் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச்சிரித்திடு
அற்புத பூமியிதே
No comments:
Post a Comment