Thursday, January 24, 2013

சிரிப்பொலி (புதிது)


வானெழுந்த வெயில் சிரிக்கும் .  வண்ணமலர் புன்னகைக்கும்
.  வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைவயற் கதிர்சிரிக்கும்   சிற்றோடை கிளுகிளுக்கும்
.  சேர்ந்துவளர் செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானகத்துப் புள்ளினங்கள் .  காற்றொலியில் கூச்சலிடும்
.  காட்டினிலே வண்டுமலர் கண்டு சிரிக்கும்
மானமிழந் தோனைஉயர் .  மாபுகழோன் கேலிசெய்ய
.  மாறும்விதி மாற்றிவிட்டு வீழ்ந்து சிரிக்கும்

தேன்குடித்து மந்தியினம் .  துள்ளி இளித்தாடிவிழும்
.  துயருறுவோன் வாழ்வுகண்டு துறவி சிரிப்பான்
போனவனைக் காட்டினிலே . போட்டெரித்து மீண்டவனும்
, போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்
மான்விழியில் மைந்தர்குலம் .  மருள்வுகண்டு சிரித்திருக்க
.  மங்கையவள் மனதிலென்ன எண்ணி நகைப்பாள்
கூன்விழுந்த பாட்டிமனம் .  குமரியெழில் பார்திளமை                                  
.  கொண்டதிமிர் எண்ணி நிலைகண்டு சிரிப்பாள்

நீரோடும் நதி குதித்து . நெளிந்து மெல வளைந்துசெல்ல
.  நளினமுடன் கரைஅலைகள் நாளும் சிரிக்கும்
பேரோடு பூமியிலே .  பேரரிய வீரமிட்டோன்
.  பெண்மொழிக்கு தோற்றுவிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே .  ஒருவனாகத் தனித்திருக்க
.  உண்மைவழி நின்றிடினும்  உலகம் சிரிக்கும்
யாரோடிச் சென்றிடினும் .  வாழ்வோடி முந்த அதைப்
.  போராட எண்ண விதி புன்னகை பூக்கும்

தானோடிச் சுற்றுலகு .  தாங்கும்சிறு மானிடனோ
.  தன்னுடைமை பூமிஎன தரணி சிரிக்கும்
வீணாகத் உயிரெடுத்து .  வீதியிலே சாகுமினம்
  வெறிபிடித்த நிலைமை கண்டு பேய்கள் சிரிக்கும்
தானமிடும் குணமகனைத் .  தரமறுப்போன் கேலிசெய்ய
.  தாவணிப்பெண் இருவர்கூடச் சிரிப்பொலி கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவரும் .  விதியறிந்து நகைபுரிய
.  தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்

No comments:

Post a Comment