வானெழுந்த வெயில் சிரிக்கும் . வண்ணமலர் புன்னகைக்கும்
. வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைவயற் கதிர்சிரிக்கும் சிற்றோடை கிளுகிளுக்கும்
. சேர்ந்துவளர் செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானகத்துப் புள்ளினங்கள் . காற்றொலியில் கூச்சலிடும்
. காட்டினிலே வண்டுமலர் கண்டு சிரிக்கும்
மானமிழந் தோனைஉயர் . மாபுகழோன் கேலிசெய்ய
. மாறும்விதி மாற்றிவிட்டு வீழ்ந்து சிரிக்கும்
தேன்குடித்து மந்தியினம் . துள்ளி இளித்தாடிவிழும்
. துயருறுவோன் வாழ்வுகண்டு துறவி சிரிப்பான்
போனவனைக் காட்டினிலே . போட்டெரித்து மீண்டவனும்
, போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்
மான்விழியில் மைந்தர்குலம் . மருள்வுகண்டு சிரித்திருக்க
. மங்கையவள் மனதிலென்ன எண்ணி நகைப்பாள்
கூன்விழுந்த பாட்டிமனம் . குமரியெழில் பார்திளமை
. கொண்டதிமிர் எண்ணி நிலைகண்டு சிரிப்பாள்
நீரோடும் நதி குதித்து . நெளிந்து மெல வளைந்துசெல்ல
. நளினமுடன் கரைஅலைகள் நாளும் சிரிக்கும்
பேரோடு பூமியிலே . பேரரிய வீரமிட்டோன்
. பெண்மொழிக்கு தோற்றுவிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே . ஒருவனாகத் தனித்திருக்க
. உண்மைவழி நின்றிடினும் உலகம் சிரிக்கும்
யாரோடிச் சென்றிடினும் . வாழ்வோடி முந்த அதைப்
. போராட எண்ண விதி புன்னகை பூக்கும்
தானோடிச் சுற்றுலகு . தாங்கும்சிறு மானிடனோ
. தன்னுடைமை பூமிஎன தரணி சிரிக்கும்
வீணாகத் உயிரெடுத்து . வீதியிலே சாகுமினம்
வெறிபிடித்த நிலைமை கண்டு பேய்கள் சிரிக்கும்
தானமிடும் குணமகனைத் . தரமறுப்போன் கேலிசெய்ய
. தாவணிப்பெண் இருவர்கூடச் சிரிப்பொலி கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவரும் . விதியறிந்து நகைபுரிய
. தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்
No comments:
Post a Comment