Wednesday, January 16, 2013

நிலை மாறும்

காடுமலை யெங்கும் ஓடும்நதிக்கொரு
காரணம் தேவையில்லை - அது
தேடும்பொருளெது தேவை கடல் ஏனோ
துள்ளி அலையும்நிலை
நீடுவெளி நீலவானத்திலே நிலா
தேயும் வளரும் தொல்லை - அதை
ஓடுமுகில் மறைத் தாலுமுள்ளே நின்றும்
ஓங்கு மொளிசெறிவை

கேடு கெட்டே அல்லல் கொண்டா லன்புதனும்
கெட்டுஅழிவதில்லை அதைக்
கோடு கிழித்தெவர் கூட்டில் அடைப்பினும்
கொள்ளன்பு தேய்வதில்லை
வீடுஇருக்கையில் வெட்ட வெளிவைத்த
வெள்ளியிற் செய்தசிலை என்ன
பாடுபட்டும் உள்ளம் பாசம் கொழிக்கையில்
 பாரம் எடுப்பதில்லை

நாடுசெழித்திட நாலும்தெரிந்தவர்
நல்லர சோச்சுகையில் - அங்கு
வாடுமுயிர்களாய்  வாழ்வுமுண்டோ அவர்
வாசம் உலர்வதில்லை
மூடுமந் திரங்கள் தேவையில்லை  இந்த
மோட்சம் இறைவன்கொடை -அதைப்
போடுஎன வீசிப் புன்னகைத்தால் அதைப்
போல மடைமையில்லை

ஆடும்வரை யாடும் அப்பன் நடமிட
ஆகிடும் வாழ்வழிவைப் - படும்
பாடு கொண்டும் விழி பார்க்கும்வேளை
சார்த்த பாரதிபோலுருவை
ஊடு நிறுத்தியே ஆடவைத்தவிதி
உண்மை மறைத்த நிலை ஒரு
பீடு கொள்ள முகில் போர்த்தநிலவெனப் 
போனது போல்நிலைமை

ஏடுஎடுத்தவன் என்னஎழுதியும்
இட்ட விதியின் வேலை - அது
சாடுஎனச் சொல்லி சோகம் பொழியினும்,
சேரும்மனதில் சுவை
சூடுகொண்டேகாலைதோன்று வெயில்வரச்
சூழுமிருள் மனதை - விட்டு
ஓடும்வகை செய்யும் உள்ளம் கொண்டதெல்லாம்
ஒரிரவென்ற நிலை

No comments:

Post a Comment