Saturday, April 14, 2012

புயல் அழித்தபின்!

( மன்னவன் )
புயலடித்த தேசம் இப்பூக்கள் வீழ்ந்துகாணும் - ஆ..
  கலங்கடித்த காயம் ஏன் காணுதிந்தநாடும்
மயிலெடுத்த பாதம் பொன்மலர் துடித்ததாயும் - ஓர்
    மழையடித்து ஓயும் அதில் மண் இழுத்து ஓடும்
ஒயிலெடுத்த சிலையும் தான் உடைய வென்றுவீழும் அது
   உயிரெடுத்தகனவும் பார் உண்மையற்றதாகும்
கையிலெடுத்த குழலில் ஏன் காணவில்லைஓசை - இனி
   எது எடுப்பதென்று நான் ஏங்குகிறேன் கூறாய்

( பாடகன் தோழன்)

தண்ணிலவு எழுந்ததுகாண் நிர்மலவானம் - இனி
 தரணியெங்கும் பொங்குமின்ப இன்னிசைகானம்
வெண்மலரைத் தூவி மகிழ்வெய்திடவேண்டும் இங்கு
  விளையாடிப் பூவழைந்து வேண்டிட இன்பம்
எண்ணமுதல் புயல்திரும்பி கடலிடை போகும் -இனி
  இளம்மனதாய் குதித்திட எம்தேசமும்மீளும்
திண்ணமுடன் கற்பனைகள தீந்தமிழ்கூறும் - அந்த
   திறமையினில் அமுதகவி தேர்ந்திடவேண்டும்

மன்னவனும் மனம்மயங்க புன்னகை செய்யும் சில
 மந்திரங்கள் கேட்குது நல் மாலைகள் தோளும்
பன்நெடுகக் காலடியில் போடுக பூவும் - அப்
  பனிமலரின் மென்மைபாதம்  கண்டிடவேண்டும்
உன்னதமாய் வானுறக்கம் கண்டது வேந்தே- இனி
  உள்ளதெல்லாம் இனிமை கொண்ட கற்கண்டுதேனே
மென்னரும்பு மலர்நிறைந்து தோன்றுது காட்சி -அல்ல
    மேக மிடை தாரகைகள் மின்னிடு மாட்சி

No comments:

Post a Comment