தடதட வான் இடியெழுஞ் சத்தம்
. தலையினில் விழுதென அச்சம்
கிடகிட வென முழவுகள் தட்டும்
. கேளொலி நடுங்கிட வைக்கும்
படபட மழை கூரையில் தட்டும்
. பழகிய இசைதனைக் கொட்டும்
மடமட மரம் முறிகிற சத்தம்
. மரம்விழக் குருவிகள் கத்தும்
கடகட வென விருகரம் கொட்டும்
. கதவுடை சாளரம் தட்டும்
விடுஎனப் புகுவளி தரு முத்தம்
. வெறுப்புடை பதி தொடுங் கூச்சம்
கொடுமையின் பரிசெனத் தரை தட்டும்
. குவலயம் புயலிடை சிக்கும்
கடும்பயம் உளம்தனை முழு தள்ளும்
. கதியுடன் இருதயம் துள்ளும்
முடையுடை குடி மகனழத் திட்டும்
. முதலுடை யவனிடி மின்னல்
தடையிடப் பெருகிடும் மழை வெள்ளம்
. தமிழ்நிலம் கொளுமர சொக்கும்
விடைகொடு வாவென விண் கேட்கும்
. விளை புயல்ஊ எனக் கத்தும்
படையுடை பகை அரசனின் யுத்தம்
. பவனியில் பலியிடும் சத்தம்,
தருவது பெரும் பிரளயம் போலும்
. தருமம்கொள் பழிதனும் சூழும்
வருவது எதுவெனில் இலைஅச்சம்
. வான்புவி தனுமிலை மிச்சம்
பெருகுது புவியினில் புகுவெள்ளம்
. பிரி நிலம் காலிடை எனினும்
கருகலில் விடிவெழ உயிர் சத்தம்
.. காணுமோ விடப் பெரிதென்னும்.
*****************
. தலையினில் விழுதென அச்சம்
கிடகிட வென முழவுகள் தட்டும்
. கேளொலி நடுங்கிட வைக்கும்
படபட மழை கூரையில் தட்டும்
. பழகிய இசைதனைக் கொட்டும்
மடமட மரம் முறிகிற சத்தம்
. மரம்விழக் குருவிகள் கத்தும்
கடகட வென விருகரம் கொட்டும்
. கதவுடை சாளரம் தட்டும்
விடுஎனப் புகுவளி தரு முத்தம்
. வெறுப்புடை பதி தொடுங் கூச்சம்
கொடுமையின் பரிசெனத் தரை தட்டும்
. குவலயம் புயலிடை சிக்கும்
கடும்பயம் உளம்தனை முழு தள்ளும்
. கதியுடன் இருதயம் துள்ளும்
முடையுடை குடி மகனழத் திட்டும்
. முதலுடை யவனிடி மின்னல்
தடையிடப் பெருகிடும் மழை வெள்ளம்
. தமிழ்நிலம் கொளுமர சொக்கும்
விடைகொடு வாவென விண் கேட்கும்
. விளை புயல்ஊ எனக் கத்தும்
படையுடை பகை அரசனின் யுத்தம்
. பவனியில் பலியிடும் சத்தம்,
தருவது பெரும் பிரளயம் போலும்
. தருமம்கொள் பழிதனும் சூழும்
வருவது எதுவெனில் இலைஅச்சம்
. வான்புவி தனுமிலை மிச்சம்
பெருகுது புவியினில் புகுவெள்ளம்
. பிரி நிலம் காலிடை எனினும்
கருகலில் விடிவெழ உயிர் சத்தம்
.. காணுமோ விடப் பெரிதென்னும்.
*****************
No comments:
Post a Comment