Sunday, April 8, 2012

இடி, மின்னல் , மழை!

தடதட வான் இடியெழுஞ் சத்தம்
.   தலையினில் விழுதென அச்சம்
கிடகிட வென முழவுகள் தட்டும்
.  கேளொலி நடுங்கிட வைக்கும்
படபட மழை கூரையில் தட்டும்
.  பழகிய இசைதனைக் கொட்டும்
மடமட மரம் முறிகிற சத்தம்
.   மரம்விழக் குருவிகள் கத்தும்

கடகட வென விருகரம் கொட்டும்
.  கதவுடை சாளரம் தட்டும்
விடுஎனப் புகுவளி தரு முத்தம்
.  வெறுப்புடை பதி தொடுங் கூச்சம்
கொடுமையின் பரிசெனத் தரை தட்டும்
.  குவலயம் புயலிடை சிக்கும்
கடும்பயம் உளம்தனை முழு தள்ளும்
.     கதியுடன் இருதயம் துள்ளும்

முடையுடை குடி மகனழத் திட்டும்
.  முதலுடை யவனிடி மின்னல்
தடையிடப் பெருகிடும் மழை வெள்ளம்
.   தமிழ்நிலம் கொளுமர சொக்கும்
விடைகொடு வாவென விண் கேட்கும்
.   விளை புயல்ஊ எனக் கத்தும்
படையுடை பகை அரசனின் யுத்தம்
.    பவனியில் பலியிடும் சத்தம்,


தருவது பெரும் பிரளயம் போலும்
.  தருமம்கொள் பழிதனும் சூழும்
வருவது எதுவெனில் இலைஅச்சம்
.  வான்புவி தனுமிலை மிச்சம்
பெருகுது புவியினில் புகுவெள்ளம்
.  பிரி நிலம் காலிடை எனினும்
கருகலில் விடிவெழ உயிர் சத்தம்
..  காணுமோ விடப் பெரிதென்னும்.
*****************

No comments:

Post a Comment