இது ஒரு வித்தியாசமானது!
இங்கே உள்ளபாடலில் ஒருபெண் சமபந்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறதா?
இல்லையே!
ஒரு ஆடவன் மட்டும்தான் முழுக் கவிதையிலுமே உண்டு (முதலடி விலக்கு)
எப்படி? இரண்டு சிறு தட்டச்சு தவறுகள் ( வேண்டுமென்றே விட்ட பிழைகளைத் தவிர-!
( னி -நி ஆகவும் நீ - னீயாகவும்) மிகுதி பிரித்து வாசிப்பதில் உண்டு
விளக்கம் கீழே உண்டு.
குறிஞ்சிமகள் கொய்தமலர் (பிழை)
மிஞ்சுமலை கூந்தல்எழில் கொண்டவள் அன்னநடையில்
கொஞ்சுமுகில் சென்று உறை குறிஞ்சி நிலத்தாள் வான்
பஞ்சுமுகில் கீழ்நிலத்தில் பன்மலர்கள்கொய்ய வெண்ணி
அஞ்சிநடந் தேகையிலே வந்தொருவன் மையெடுத்த
ஒளிவிழியும் பட்டுவிட உருவழியும் எனும்கொடுமை
யெழுகுணங் கொள்ளாதவனும் எப்படியோ கண்டுவிட
ஒழிவுமறை வற்றுவிட்ட உயர்மலர்கள் வனத்திடையே
அழகுமலர் கூட்டமிடை இதுவுமொரு மலரெனவே
கட்டழகுப் பூவை, எழில்கொண்டவளை பூங்கொடியை
தொட்டெடுத்த லின்றி திரும்பேன் எனத் துணிந்து
விட்டுமினிச் செல்லேன்ஆ வேண்டும் நீ என்றரற்றி
கிட்டே நெருங்கி ஆ கெட்டதே இக்கணம் மனமே
எட்டி யிருந்தவளைக் கொடியிடையில் தொட்டுவிட
விட்டகணம் பட்டதுவோ தொட்டதுவோ நானறியேன்
கெட்டு நிலைதான் தவறக் கொடிமலராய் துவண்டுவிழ
தொட்டெடுத்து மேனிசப்த மற்றவகை தூக்கிவிட்டு
நெட்டுயர்ந்த பூங்கொடியோ நிலகுலைந்துமவன் குலையா
எட்டித் தருவதிலே இணைத்து விட மலரிதழ் மேல்
தொட்டகையும் விலகவென சத்தமிட்டு திடுமெனவே
பட்டவிரலால் நொந்தோ பாதியிலே எழுந்தே நீ
விட்டுப்பிரிந்தோட விலகியதோ மீண்டும்கை
எட்டுமோ இனியென்று எண்ணியிடை மனம்மாறி
தொட்டெடுக்க மீண்டும் துவண்டுவிழும் போஎன்றே
விட்டேன் பிழைத்தாய் எனச் சொல்லி வழிநடந்தான்
விளக்கம்:
குறிஞ்சிநில மன்னன் கொய்தமலர் (சரி)
1. /கொண்டவள் அன்னநடையில்/ - கொண்டவளன்ன நடையில்
கூந்தல் கொண்ட பெண்போல அழகாக வானில் நடந்தமுகில் என்று கொள்ளலாமா
2. /குறிஞ்சி நிலத்தாள் வான்/
குறிஞ்சி நிலத்தாள்வான் .- ஆளுபவன் (குறிஞ்சி நில மன்னன் என்று
கொள்ளலாமா?)
3. /வந்தொருவன் மையெடுத்த/ - வந்தொரு வன்மை யெடுத்த -
4. /குணம் கொள்ளாதவனும்/ - குணம்கொள் ஆதவனும்
5. /எழில்கொண்டவளை பூங்கொடியை/ - எழில்கொண்ட வளை(ந்த)பூங்கொடியை
6. /எட்டி யிருந்தவளை கொடியிடையில் தொட்டுவிட/-
மீண்டும் அதேதான் -பூ ஒன்றைப் பறிப்பதற்காக கொடியை வளைக்கின்றான்
தொட்டெடுத்து மேனி சப்த மற்றவகை -
இங்கேதான் தட்டச்சு தவறு னி - நி ஆகவேண்டும்
7. (தொட்டெடுத்துமே நிசப்த மற்றவகை)
8. எட்டித் ’தரு’வதிலே - எட்டி மரத்தின்மேல் கொடியைமீண்டும் இணைத்து
பாதியிலே எழுந்தே நீ - இங்கேயும் நீ - னீ யாக வேண்டும்
(மதுவுண்ட பாதியிலே எழுந் தேனீ)
9. இங்கே மன்னன் அஞ்சிநடந்தான் -இருக்கமுடியாது ஆனால் இருக்கலாம்
ஒளிவிழியும் பட்டுவிட உருவழியும் (மலர்கள்)
10. அவ்வளவுதான் மீண்டும் ஒருமுறை.....பாருங்கள்
மன்னனும் மலரும்தான் -பெண்ணிங்கு இல்லை
No comments:
Post a Comment