நிலவுகாயுது தனிமையிலே -அந்த
நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த
நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர- என்றும்
உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் -அதன்
உணர்வுக்கு தீயெதுவோ?
கனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது
கற்பனையாம் மனமே
கவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது
காற்றென ஓடிடுமே
மனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு
மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் -அதை
மறந்திடு விரைவினிலே
தீயில் கைகளை வைக்கமுன்பு -அதை
தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு -அந்த
தீயது வெறும் சடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த
குலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் -இது
குடிசையின் வெறுந் தரையே
காய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்
காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது
கனவெழும் களித்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த
திங்களும் முழுமைகொளும்
தேனில் இனிய நல்லொளிபரவ -அது
தினம்தினம் உலவிடுமே!
சேர்ந்த உறவுகளோடுதினம் -நீ
சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் -இலை
சிந்திடும் நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த
நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா -இந்த
நிஜமெனும் வாழ்க்கையதே!
வானத்தொலைவிலே நீயிருந்தா- லென்ன?
வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே -நான்
காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே -எனை
நாடி விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே -உனைக்
காணவும் முடியலையே
நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த
நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர- என்றும்
உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் -அதன்
உணர்வுக்கு தீயெதுவோ?
கனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது
கற்பனையாம் மனமே
கவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது
காற்றென ஓடிடுமே
மனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு
மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் -அதை
மறந்திடு விரைவினிலே
தீயில் கைகளை வைக்கமுன்பு -அதை
தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு -அந்த
தீயது வெறும் சடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த
குலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் -இது
குடிசையின் வெறுந் தரையே
காய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்
காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது
கனவெழும் களித்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த
திங்களும் முழுமைகொளும்
தேனில் இனிய நல்லொளிபரவ -அது
தினம்தினம் உலவிடுமே!
சேர்ந்த உறவுகளோடுதினம் -நீ
சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் -இலை
சிந்திடும் நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த
நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா -இந்த
நிஜமெனும் வாழ்க்கையதே!
வானத்தொலைவிலே நீயிருந்தா- லென்ன?
வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே -நான்
காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே -எனை
நாடி விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே -உனைக்
காணவும் முடியலையே
No comments:
Post a Comment