Saturday, February 19, 2011

சுதந்திரம் தேடி..!

காற்றோட, காற்றோடு மூச்சோட, மூச்சோடு
  காணும்நம் வாழ்வோடவே
நேற்றோடிப் போச்சேஎம் நினைவோடு வாழ்வென்னும்
     நிகழ்வான தோர் காலமே
தோற்றோடும் வாழ்வோடு தீயோடிக் கரியாக்கத்
      தீந்தமிழ் எமதீழமே
சேற்றோடு புதைகின்ற சிறுகால்கள் போல்மீளா
      சிறுமைக்கு பலியானதே

மாற்றாக ஆற்றுநீர் மேலோடிக் காக்குமோர்    
   மாபெருங் கட்டுமரமாய்
ஊற்றாக தமிழ்ஈழ அரசொன்று உருவகி 
  ஒளிர்கின்ற தெமக்காகவே
காற்றோடும் அதுபோல கடுவேகம் கொண்டதாய்
   காலத்தை வெல்லுமிதுவே
நூற்றோடு ஒன்றென்னும் நிலையன்றி இதுஉண்மை
     நிறைவுள்ள அரசானதே

’காற்றாடி’ காற்றோடும் திசையோடும் நாமிங்கு
    ஆற்றோடு எதிர்நீந்தியே
வேற்றோடு தீமைகள் விளைந்திடச் செய்வோர்க்கு
     வேர்த்தோடச் செய்வோமின்றே
கூற்றோடு உண்மைகள் கொண்டோடி வெளிவந்து
     குடிமக்கள் தெளிவாகவே
மாற்றோடு மக்களின் மாபெரும் சக்தியால்
     மலர்ந்திடும் தமிழ் ஈழமே

முள்ளோடிக் கடிகார முகத்தோடு உருண்டோடி
     மணி நேரம் தினம்போகவே
உள்ளோடி விரிகின்ற உணர்வோடு நாமோடி
    உரிமைகள் தனைக்கேட்டுமே
கள்ளோடு விரிகின்ற கவின்பூக்கள் தனைப்போல
     காலத்தில் ஒர்நாளிலே
மெள்ளவே தமிழீழம்லமலர்ந்திடச் செய்குவோம்
     மனதிலே திடம் கொண்டுமே

என்றோடி நம்வாழ்வு இருள்நின்று வெளிவந்து
    இறைமைகொள் தனிநாட்டையே
சென்றோடிக் கைபெற்று சீராகும்விடுதலையின்
    சிறப்பென்ற தனைநாமுமே
கொன்றோடி இனம்கொல்லும் கொடுமைக்கு எதிராகக்
    குரலோடிப் பெரிதாகவே
நின்றோடி நாம்வெல்வோம்  நிறைவாய்சு தந்திரம்
    நேரும்வரை ஓயோமே

No comments:

Post a Comment