Sunday, January 9, 2011

புத்தாண்டே புதுவரவே

புத்தாண்டே புதுவரவே புன்னகைத்து வாராயோ?
புவியாண்டுபலகோடி நன்மைகளைத் தாராயோ?
பத்தோடு ஒன்றாகப் பாவங்கள் தாராமல்
பழிநீங்கி இனம்தளைக்க புதுவாழ்வு தருவாயோ?

நித்தமும் அழுதழுது நெஞ்சும்கனத்ததடி
நீநடந்து நிலமாண்டால் நீதிவழி திறக்காதோ?
புத்தாண்டு மகளே புதுவரவே வந்திங்கு
பொய்யா துறுதியுடன் பேசியெமைக் காக்காயோ?

(நீண்ட கவிதை தொடர்ந்து கொள்ள...)

No comments:

Post a Comment