Tuesday, March 12, 2013

மங்கல ரூபி

மங்கல ரூபசு கந்தினி மாதே மலைமகளே
சங்கு முழங்கிய தாலும் பெரும்புகழ் தந்தவளே
செங்குல மீது சொரிந்தகுறை தன்னைச் சீர்செயவே
எங்கும் மொளிர்ந்திடு வண்ண முயர்சுடர் ஏற்றிவிடு

இங்கு குளிர்தர இன்பமெனும் முகில் வந்திடுவாய்
சங்கரனின் கொடுவெங் கதிரில் மனம் கொண்டுமொரு
பொங்கி நடம் செயப் புன்மை யழிந்திடச் செய்ததென
பங்கம் விளைத்தவன் பாதம் வணங்கிடச் செய்துவிடு

சிங்கம் தனிற் தினம் எங்கும் புகுந்திடச் செய்பவளே
எங்கள் உளம் வரை வந்து பிழைகளும் கொல்பவளே
 தங்கமெனும் மனம் கொண்டெமை வெல்லும் சங்கரியே
இங்கிவர் ஏழை உளந்தனைக் காத்திட வருவாயோ

மங்கு மிருள் எனும் மாயை மறைந்திடக் காணுவதாய்
கங்கை கொளும்பெரு வெள்ளமதில் பழி கழுவியொரு
எங்கும் நிறை ந்திட ஊதிய சங்கு மொலித்துவர
மங்கல மாயிவன் கண்களிலே சக்தி தந்து விடு

No comments:

Post a Comment