Tuesday, February 12, 2013

எழு தமிழா

அழுவது சிறுமைநில் எழுவது பெருமைகொள்
அணியெனத் திரள் மனிதா
தொழுவதுஇழிமையும் துவள்வது பழமையென்
றுணர்வெடு நட தமிழா
அழிவது இவரல்ல அகந்தையி னுறைவிடம்
அவரெனக் குறிசொல்லடா
கழிவது உயிர், இது கலங்கிடும் பொழுதல்ல
கரமெடு பதில் கேளடா

பழிவர உ ரிதல்ல படைகொண்ட துயிர்வாழப்
பழங்கதை யெடுத்துரைடா
உளிகொண்டு பொழிவதில் உருவரும் சிலையெனில்
எடு உளி படை தமிழா
தெளிவில்லை மனங்களின் எனில் இவர்பிடியினில்
திணறென ஒருவிதியா
களிகொண்டு புவியதும் கலகமே பயனெனக்
கருதிடில் சரியென்பதா

வழியொன்று மிதைவிட வருமெனத் திடமிலை
வளை மதியொடு உலகை
புளிந்தெடு மனதில் புதுவைகை உணர்வுற
பொறி உனதிற மையினை
துளிதனும் எமதுயர் தெரிபவர் எவருளர்
தனதொருசுகமு மெண்ணி
அழகுறும் உலகது இருந்திடவருவது
ஒளியெனக் கொளல்மடமை

மொழியதும் இனமதும் அழியென எழுபவன்
மதிபிறல் தரமுடையோன்
கழி யுயிரெனக்கொலை  வெறியுடன் குடிகளைக்
கெடுப்பவன் எதிரியொன்றே
பழிகொள்ள எழுநட பருவத்திற் பயிரிடப்
பழயவைமற ஒருதாய்
வழிவரும் தமிழனைவிழி வழிஒழுகுதல்
வெகுண்டெழு நிறுத்துவதாய்

No comments:

Post a Comment