அழுதிடுங்கள் ஒருதடவை ஆவெனக்கதறி
அடுத்து வருங் காலமதில் அதுவிருக்காது
விழுந்திடுங்கள் மேனிதொட்டு வேதனைகூடி
விரும்பிடினும் விழுவதினி வேண்டிவராது
மெழுகெனவே உருகிடினும் மின்னொளிபோயும்
மேற்கில்மறை ஆதவன்கீழ் மீளவருங்காண்
எழுமதனின் ஒளிபரவ முழுதிருளோடும்
ஏற்றமுறும் வாழ்வமையும் இன்பமுண்டாகும்
கழுகுயரப் பறந்திடினும் காலமெப்போதும்
காற்றினிலே வாழ்ந்திடுமா கீழ்வர வேண்டும்
பழுதுகொண்ட சக்கரத்தைப் பூட்டியதேரும்
பயணமதில் பாதிவழி போகையில்வீழும்
தொழுதல் விடு துடித்தெழுவாய் துன்பமுமெங்கள்
துணைநடந்த நிழலில்லையே தொலைத்திடப் போகும்
எழுந்தவரும் நடப்பவரும் விழுந்திடும்நேரம்
விழுந்தவர்நாம் எழுந்து இனி நடந்திடும்காலம்
வியர்வைமட்டும் விழுந்திருக்க, வெள்ளையில்மாடு
விரட்டிவயல் உழுதவாழ்வு வீணெனப்போயும்
உயர் உழுவை நிலமுருண்டு ஓடும்வண்டிகள்
ஓசையிட கதிரறுக்கும் உன்னதம் காண்போம்
துயர்விடுத்த குருவிகளும் துணையுடன்கூடித்
தொலைவில்நுனிக் கிளையிருந்து தொங்கிஆடிடும்
வயிறெடுத்த பசியுடனே வாழ்ந்த வாழ்வெல்லாம்
வரண்டுவிட வசதிசெழித் தோங்கிடும் நாடும்
நரியிருக்க நாய்கள்குரைத் தோடிடச்சுற்றி
நர்த்தனமென் றாடிடும்பேய் நடுநிசி வந்து
எரியவைத்த வீடுகளில் இருந்திடும் கரியை
எடுத்துடலில் பூசியபின் எண்ணெயும் ஊற்றி
புரிந்த வதம் வெறிபிடித்த பொழுது களெல்லாம்
பிணமடுக்கிப் பார்த்தழுத பாவங்கள் நீங்க
தெரியவென வரைபடத்தில் தோன்றிடும் நாடும்
தீந்தமிழர் பெருநகரம் தேனொளி கொள்ளும்
புரியடுத்து புறப்படுநீ பொழுதுகள் விடியும்
புன்னகையை மட்டுஎடு புன்மைகள் துன்பம்
வரிந்தடுக்கி வைத்துவிலை விற்றிடவேண்டும்
வாங்கவெனப் பெரியமகா வம்சங்கள் கேட்கும்
சரிகொடுத்து விட்டிடுவோம் சரித்திரம் மாற்றிச்
சாவுகளும் நின்றுவிடச் சுதந்திரம் வாங்கப்
பெரிதெடுத்த கடமைமுடி புத்தொளி யேற்றிப்
புனிதமண்ணில் பிறந்தவர்க்குப் புன்னகை ஈவோம்
அடுத்து வருங் காலமதில் அதுவிருக்காது
விழுந்திடுங்கள் மேனிதொட்டு வேதனைகூடி
விரும்பிடினும் விழுவதினி வேண்டிவராது
மெழுகெனவே உருகிடினும் மின்னொளிபோயும்
மேற்கில்மறை ஆதவன்கீழ் மீளவருங்காண்
எழுமதனின் ஒளிபரவ முழுதிருளோடும்
ஏற்றமுறும் வாழ்வமையும் இன்பமுண்டாகும்
கழுகுயரப் பறந்திடினும் காலமெப்போதும்
காற்றினிலே வாழ்ந்திடுமா கீழ்வர வேண்டும்
பழுதுகொண்ட சக்கரத்தைப் பூட்டியதேரும்
பயணமதில் பாதிவழி போகையில்வீழும்
தொழுதல் விடு துடித்தெழுவாய் துன்பமுமெங்கள்
துணைநடந்த நிழலில்லையே தொலைத்திடப் போகும்
எழுந்தவரும் நடப்பவரும் விழுந்திடும்நேரம்
விழுந்தவர்நாம் எழுந்து இனி நடந்திடும்காலம்
வியர்வைமட்டும் விழுந்திருக்க, வெள்ளையில்மாடு
விரட்டிவயல் உழுதவாழ்வு வீணெனப்போயும்
உயர் உழுவை நிலமுருண்டு ஓடும்வண்டிகள்
ஓசையிட கதிரறுக்கும் உன்னதம் காண்போம்
துயர்விடுத்த குருவிகளும் துணையுடன்கூடித்
தொலைவில்நுனிக் கிளையிருந்து தொங்கிஆடிடும்
வயிறெடுத்த பசியுடனே வாழ்ந்த வாழ்வெல்லாம்
வரண்டுவிட வசதிசெழித் தோங்கிடும் நாடும்
நரியிருக்க நாய்கள்குரைத் தோடிடச்சுற்றி
நர்த்தனமென் றாடிடும்பேய் நடுநிசி வந்து
எரியவைத்த வீடுகளில் இருந்திடும் கரியை
எடுத்துடலில் பூசியபின் எண்ணெயும் ஊற்றி
புரிந்த வதம் வெறிபிடித்த பொழுது களெல்லாம்
பிணமடுக்கிப் பார்த்தழுத பாவங்கள் நீங்க
தெரியவென வரைபடத்தில் தோன்றிடும் நாடும்
தீந்தமிழர் பெருநகரம் தேனொளி கொள்ளும்
புரியடுத்து புறப்படுநீ பொழுதுகள் விடியும்
புன்னகையை மட்டுஎடு புன்மைகள் துன்பம்
வரிந்தடுக்கி வைத்துவிலை விற்றிடவேண்டும்
வாங்கவெனப் பெரியமகா வம்சங்கள் கேட்கும்
சரிகொடுத்து விட்டிடுவோம் சரித்திரம் மாற்றிச்
சாவுகளும் நின்றுவிடச் சுதந்திரம் வாங்கப்
பெரிதெடுத்த கடமைமுடி புத்தொளி யேற்றிப்
புனிதமண்ணில் பிறந்தவர்க்குப் புன்னகை ஈவோம்
No comments:
Post a Comment