(2009வது ஆண்டி ல் எழுதிய கவிதை)
சின்னஞ் சிறுமலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவதுஏன்
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்
ஓடி வருகையிலே - பின்னால்
ஆமி துரத்துகிறான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொல்லுகிறான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
வானிற் பறந்துவந்து
ஆயிரம் நூறெனவே - குண்டு,
அள்ளியே போடுகின்றான்
உச்சிதனில் வீழும் - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடியுதடி - ஊரே
சுட்டகா டாகுதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டி யணைத்து அன்பை
தந்தவள் மேனியினைக் - கொன்று
தணலில் வீசிவிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பெண்ணே உன்தந்தையுடல்
சன்னம் துளைக்கச் செய்து - வீதி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவே - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - வாழ்வில்
ஆயிரம் கொண்டவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
முள்ளி வாய்க் காலினிலே - பூத்து
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு சிறுவர்களும்
கொள்ளி வைத்தேமுடித்தார் - கோரம்
எல்லை கடந்ததடி
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
ஈழத்தமிழ் வயிற்றில் - ஏனோ
ஊன்றிக் கருவெடுத்தாய்
எங்கள் மண்ணில்மலர்ந்தாய் இதற்கு
மன்னிப்பே இல்லையடி
சொல்லும் மழைலைஎல்லாம் - மறந்து
சித்திரமே அழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்மிதியா - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
நல்லவர் தூங்கவில்லை - மீண்டும்
நாடு எண்ணி எழுந்தார்
தூர ஒளி யெழுந்து- உன்னை
தேடிவரும் அமுதே
வீரமெடுத்து அறம் மீண்டும்
மெல்ல வரும் முன்னே
யாரும் இல்லைஉனக்கு என்ற
அச்சம் இனி வேண்டாம்
பாரில் பரந்ததமிழ் அமைக்கும்
கொள்கை சிறக்குமடி
சின்னஞ் சிறுமலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவதுஏன்
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்
ஓடி வருகையிலே - பின்னால்
ஆமி துரத்துகிறான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொல்லுகிறான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
வானிற் பறந்துவந்து
ஆயிரம் நூறெனவே - குண்டு,
அள்ளியே போடுகின்றான்
உச்சிதனில் வீழும் - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடியுதடி - ஊரே
சுட்டகா டாகுதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டி யணைத்து அன்பை
தந்தவள் மேனியினைக் - கொன்று
தணலில் வீசிவிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பெண்ணே உன்தந்தையுடல்
சன்னம் துளைக்கச் செய்து - வீதி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவே - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - வாழ்வில்
ஆயிரம் கொண்டவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
முள்ளி வாய்க் காலினிலே - பூத்து
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு சிறுவர்களும்
கொள்ளி வைத்தேமுடித்தார் - கோரம்
எல்லை கடந்ததடி
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
ஈழத்தமிழ் வயிற்றில் - ஏனோ
ஊன்றிக் கருவெடுத்தாய்
எங்கள் மண்ணில்மலர்ந்தாய் இதற்கு
மன்னிப்பே இல்லையடி
சொல்லும் மழைலைஎல்லாம் - மறந்து
சித்திரமே அழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்மிதியா - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
நல்லவர் தூங்கவில்லை - மீண்டும்
நாடு எண்ணி எழுந்தார்
தூர ஒளி யெழுந்து- உன்னை
தேடிவரும் அமுதே
வீரமெடுத்து அறம் மீண்டும்
மெல்ல வரும் முன்னே
யாரும் இல்லைஉனக்கு என்ற
அச்சம் இனி வேண்டாம்
பாரில் பரந்ததமிழ் அமைக்கும்
கொள்கை சிறக்குமடி
கனத்திடும் வரிகள்..
ReplyDelete// வந்தவர் போவதும் சென்றவர் மீள்வதும்
ReplyDeleteஉண்டென்றுசொல் லுவையோ கிளியே
அந்த வகையினில் சென்றநம் சொந்தமும்
வந்துபிறப்ப துண்டோ இனியே
சுந்தர மைந்தரும் செவ்விழி மாதரும்
செந்தமிழ்மீது கொண்டோர் அனலே
சந்தன மாமரம் வெந்தது போயிந்த
சொந்தமுயிர் கொள்ளு மோ துளிரே// ... மிகவும் அருமை நண்பரே!!!
"இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்" வாழ்த்துக்கள்!!!
அன்புடன்,
மு இராமதாசு.